சுகம்

சுகம் என்பது அடையாளம் காணவேண்டியதாகும். பிராப்தம் கொள்ள வேண்டியதல்ல. எவரொருவர் வஷ்துக்களை சுகமாக எண்ணுகிறாரோ அவருக்கு உண்மையான சுகம் கிட்டாது. ஆஸ்தியையும் அதிகாரத்தையும் சுகம் எனக்கொள்பவர் தனது வாழ்வை அழிவின் பாதையில் நடாத்த துவங்குகிறார். அப்போது தர்ம்மும் நியாயமும் இரட்சிக்கப்படும். அழிவிற்கு வழிவகுப்பவர்கள் அழிந்து போவார்கள். இரட்சிக்கப்பட வேண்டியவர்கள் இரட்சிக்கப்படுவார்கள். இதனால், சுகம் என்பது அறியப்பட வேண்டியது. அடைந்து கொள்ள வேண்டியதல்ல.
 
அநியாயத்தை எதிர்க்கும் துணிவு ...எல்லோருக்கும் உண்டென்பதனை அறிந்துகொள்ள வேண்டும். நல்லெண்ணம் கொண்டு அவற்றை மேற்கொள்ளாதுள்ளனர். உண்மையைச் கூறினால் முடிவொன்று ஏற்படுமானால் அது ஒரு துவக்கத்திற்கு நிச்சயம் வழி வகுக்கும். ஆனால் வேம்பின் விருட்சம்தனில் மாங்கனியானது என்றும் விழையாது.
 
சத்தியத்தை அவமானமாக கருதுபவன் அசத்தியத்தை இலாபமாக கருதுகின்றான். துறவியாய் இருப்பவன் தவறொன்றிழைப்பதால் அவனாற்றிய தவறான காரியம் தவறில்லை என்றாகாது. அதர்மச் செயலால் பலன் ஏதுமாகாது. நஞ்சு கலந்த உணவை உண்டதால் உடம்பின் எத்தேகம் பாதிக்கப்பட்டது என்பது முக்கியமல்ல. உணவில் நஞ்சை கலந்த்தே குற்றமாக கருதப்படும். பெரும் தவறொன்றை இழைத்த பிறகு தண்டனையை கண்டு அஞ்சுவதில் என்ன தாட்பர்யம் உள்ளது?