ஆண் Vs பெண்

எமது சூழலில் ஆணும் பெண்ணும் சரிசமமாக பழகுவதற்கான சந்தர்ப்பங்கள் பெரிதாக கிடைக்காததன் காரணமாக எதிர் பால் என்ன நினைக்கின்றது? அவைகளுக்கிடையில் எவை சாதாரண விடயங்கள்? எவை அசாதாரண விடயங்கள் என்பது எமக்கு பொதுவாக தெரிவது கிடையாது.

ஒரு ஆண் பெண்ணிடம் பேசாமல் இருக்கும் போது அவன் ஏதோ கோபத்தில் இருப்பதாக பெண் நினைத்துக் கொள்கிறான். ஆனால் ஆண் எதனையும் சாதாரணமாக எடுத்துக் கொள்வதனால் நான் பேச என்ன இருக்கிறது என நினைத்து அப்படியே சாந்தமாக இருந்து விடுவான். ஆனால் பெண்கள் பொதுவில் இந்நிலைக்கு மாற்றமானவர்கள். பெண் எப்போதும் இந்நிலையை அவளுடைய சூழ்நிலையில் இருந்தே சிந்திக்கின்றாள். பெண்கள் சோமல் இருக்கிறார்கள் என்றால் அது ஏதோ ஒரு ஊடலில் இருக்கிறாள் அல்லது கோபத்தில் இருக்கிறாள் என அர்த்தம். எனவே ஆணிடம் அவள் ஏன் நீ கோபமாக இருக்கிறாய்? ஏன் என்னுடன் பேசமாட்டாய் என கேட்கும் போது அதுவே ஆண்களுக்கு தொல்லையாக தோன்றும்.
 
பொதுவான இவ்வடிப்படையில் ஆண் பெண் என்ற நபர்களுக்கிடையில் ஆகக் குறைந்தளவிலும் ஒற்றமை இல்லாததன் விளைவாக அடிப்படை தொடர்பிலேயே குறைபாடு தோன்றிவிடுகிறது. இதுவே அவர்களுக்கிடையில் நிறையவே புரிந்துணர்வற்ற நிகழ்ச்சிகளுக்கு வாய்ப்பாக அமைந்து விடுகிறது.
 
ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் இயல்பான உறவு ஏற்பட வேண்டுமாயின் அவர்களின் தொடர்பாடல் வெற்றிகரமாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாதபோது நாம் பயப்படுகின்ற வகையான உறவு முறைக்கு அதிகமாக வாய்ப்புண்டு. இயல்பான உறவு முறை வளர ஒருவருக்கு ஒருவர் எப்படி மதித்து நடக்க வேண்டும்?
 
ஆண் பெண் இருவரும் சமமான மனிதராக இருப்பினும், ஆண் முளை இயங்குவதும், பெண் முளை இயங்குவதும் வௌ;வேறு விதம். ஆணின் முளையில் மொழி அல்லது தொடர்பாடல் என்பதெற்கென ஒதுக்கப்பட்டுள்ள பகுதி மிகவும் குறுகியது. எனவே பெண்ணைப் போன்று ஆண்களால் வேகமாக பேசவோ, சிந்திக்கவோ முடியாது என்பது அறிவியல் உண்மை. எனவே, ஒரு ஆண் தொடர்ந்து தன்னுடன் பேசவில்லை, நெடு நாளாக பேசவில்லை, அல்லது தொடர்ச்சியாக பேசவில்லை என்றால் அதனை பெண்கள் தம்மை புறக்கணிப்பதாக அல்லது அவமானப்படுத்துவாக நினைக்கின்றார்கள். இது கூடாத விடயம். மாறாக, அவனால் எவ்வளவு முடியுமோ அதனை அவன் பேசியிருக்கிறான் என திருப்பதிப்பட்டுக்கொள்ள வேண்டும். என்னிடம் நீ பேசவில்லையே! நான் எதிர்பார்த்ததனை நீ கூறவில்லையே! நான் அழகாகா இருக்கிறேன் என்று நீ சொல்லவில்லையே! இந்த திகதியில் இதை நீ செய்யவேண்டும் என்று உனக்கு தெரியவில்லையே! நீ ஏன் பேச தெரியாதவனாக இருக்கிறாய்? என ஒரு பெண் கேட்டால், ஆண் எப்போதும் இவள் இவ்வளவு குறை கூறுகிறாளே! நான் இவ்வளவு செய்தும் அவள் அதனை கவனிக்கவில்லையே! இவளை திருப்பதிப் படுத்துவது கடினம் என நினைத்து பின்வாங்கிவிடுகிறான்.
 
எனவே, எதிர் பால்களுக்கிடையில் இந்த புரிதல் அதிகமாகும் போது, அவனுக்கு இவ்வளவுதான் முடியும், அவளுக்கு இவ்வளவுதான் முடியும் என்று அவர்களுக்கு புரிந்து கொள்ள முடியுமாக இருந்தால் உறவுகளுக்கிடையில் தொடர்பாடல் சற்று சுவாரஷ்யம் மிகுந்ததாக வளருமல்லவா?
 
பெண்கள் முகபாவனையை அதிகம் மதிப்பிடுவார்கள். முக வெளிப்பாடுகளை வைத்து அதிக விடயங்களை கண்டுபிடித்துவிடுவார்கள். குரல் வித்தியாசத்தை வைத்து எடைபோடுவார்கள். திகதிகளை மகச் சரியாக நினைவுபடுத்துவார்கள். இந்த இந்த திகதியில் எப்படி பேச வேண்டும், எப்படி இயல்பாக கதை அடிக்க வேண்டும், சீன் போட வேண்டும் என்றெல்லாம் பெண்களுக்கு நிச்சயமாக தெரியும். பரிதாபம் என்னவென்றால் ஆண்களுக்கு இவை எதுவுமே தெரியாது. முகத்தை பார்த்து அவள் கோபத்தில் உள்ளாளா? ஏரிச்சலில் உள்ளாளா? வலியில் துடிக்கிறாளா? என்றெல்லாம் அவர்களுக்கு மதிப்பிட தெரியாது. ஏதோ ஒரு வித்தியாசம் எதிர்மறையாக தோன்றுவதை மாத்திரம்தான் அவர்களால் புரிந்து கொள்ள முடியும்.

அப்படியென்றால் இதன் பின்னணிதான் என்னவாக இருக்கும்?
 
உங்களுக்கு விளங்கும்படியாக கூறுவதானால்,... ஆணின் மூiளை என்பது அடிப்படையில் ஒரு வேட்டைக் காரனின் மூளையில் இருந்து உருவானது. வேட்டை ஆடும் ஒருவனுக்கு மிருகம் பாவம் அதனை வேட்டையாட கூடாது என திரும்பி வந்துவிட்டால் குடும்பம் பசியால் வாடி வதங்க வேண்டியதுதான். இதன் காரணமாக, முகபாவங்களை மதித்து நடக்கின்ற மென்பொருள் இயல்பாகவே ஆண் மனிதனுக்கு இருப்பது ஆபத்து என்பதனால் அது இல்லை அல்லது பயனில் மிக குறைவு எனலாம். இதேவேளை, இந்த மென்பொருள் பெண்களுக்கு மிக அதிகமாகவே உண்டு. அப்படி இருப்பதால்தான் அவள் தன்னுடைய குழந்தை என்ன நினைக்கிறது, எதனை செய்யப் போகிறது என அறிந்து கொள்ள முடிகிறது.
 
பெண்ணை ஆண் எப்படி புரிந்து கொள்ள வேண்டும்?
 
பெண்கள் எப்போதும் உணர்வுகளுக்கு கட்டுப்பட்டவர்கள். எனவே, ஆண்கள் பெண்களை திருப்திப்படுத்த வேண்டும் அல்லது உறவுகளை கட்டிகாக்க வேண்டும் எனில் அவர்களோடு ஆண்களும் உணர்வுகளுக்கு கட்டுப்பட பழகிக் கொள்ள வேண்டும். பெண்கள் தமது உறவுகளில் ஆண்களை உணர்வுபூர்வமாக வைத்துக் கொள்கிறார்கள். ஆனால், ஆண்கள் உறவில் அவர்களை சேர்த்துக் கொள்ளும் அளவிலேயே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். வித்தியாசம் என்னவெனில் ஆண்கள் உறவுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தினை பெண்கள் உணர்வுகளுடன் பொருத்திப் பார்க்கிறார்கள் என்பதுதான்.
 
பெண் ஆணிடம் சரி சமமாக எதிர்பார்ப்பது என்ன?
 
பெண்கள் முதலில் எதனை எதிர்பார்க்கிறார்கள் எனில் ஆணின் வாழ்நாளில் அதி அதி முக்கியமான நபராக தான்தான் இருக்க வேண்டும். அவனுக்கு இந்த உலகத்தில் முதல் பெண்ணாக தான்தான் இருக்க வேண்டும், எப்போதும் நான்தான் விசேடமாகவும், முக்கியத்துவம் வாய்ந்தவளாகவும் இருக்க வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு. இதனால், அவர்களுக்கு இடம்பெறுகின்ற சிறிய சிறிய விடயங்களையும் ஆண்கள் பெரிதாக கருதி ஆ!!! அப்படியா நடந்தது? எனக் கேட்க வேண்டும் என பெண்கள் எதிர்பார்ப்பார்கள். ஆனால் இதனை ஆண்களோ, இந்த உலகத்தில் எத்தனையோ பெரிய விடயங்கள் இடம்பெறுகின்றன இதெல்லாம் ஒரு மேட்டரா என நினைத்துக் கொள்வார்கள். ஆனால் பெண்ணோ! நான் முக்கியமானவள் இல்லையா? எனக்கு என்ன நடந்தாலும் அது ஒன்றுமில்லையா? எனக்கு நடந்தது அவசியமில்லையா? நான் உனக்கு விசேடமாக தெரிவதில்லையா? இதையெல்லாம் நீ கவனிப்பதில்லையா? என 
நடந்து கொள்வார்கள். 
 
மேலும், இந்த திகதிகள், பிறந்த நாள் திகதி, வருட நிறைவு திகதி, முதல் சந்திப்பபு நடந்த திகதி, என்பனவற்றையெல்லாம் நினைவில் வைத்திருக்க வேண்டும் என பெண்கள் எதிர்பார்க்கிறார்கள். கடினமான விடயம் என்னவென்றால், இவை எல்லாம் ஆண்களின் மண்டையில் நிற்பது கிடையாது. இன்று, இன்ன கிழமை இது நிகழ்ந்த நாள் என்றெல்லாம் அவர்களுக்கு நினைவில் இருப்பது கிடையாது.
 
பெண்கள் தனது குடும்பத்தை பற்றியோ அல்லது ஆணின் குடும்பத்தை பற்றி எது வேண்டுமானாலும் பேசுவார்கள். ஆனால், ஆண் பெண்ணின் குடும்பத்தை பற்றி எதுவுமே பேசக் கூடாது. அப்படி பேசிவிட்டால் பெண்களுக்கு ஆத்திரம் வந்துவிடுகிறது. எல்லா பெண்களும் பொதுவாக உறவுகளை அதிகமாக நேசிக்கிறார்கள். பெண்கள் எல்லா நேரங்களிலும் பேச்சுக்கு அடிமையானவர்கள். அவர்கள் பேச வேண்டும், அதனை யாராவது கேட்டே ஆக வேண்டும் என்பதில் அதிகம் நாட்டம் கொண்டவர்கள். இவை இரண்டையும் ஆண் செய்துவிட்டால் அவன் மீது பெண்களுக்கு அவ்வளவு காதல் ஏற்பட்டுவிடும்.
 
ஏன் ஆண்களால் இவை முடிவதில்லை?
 
அது அவர்களின் மூளை திறனின் இயல்பாகும்;. அவர்களின்  மூளையின் வடிவாந்த முறையே அவர்களுக்கு சில விடயங்கள் பதியவே பதியாது. பெண்கள் இந்த உடலியல் தன்மையை புரிந்து கொள்ளாத வரை ஆண்கள் வேண்டுமென்றே இதனை செய்வதாக கருதிவிடுகிறார்கள். இது வெறும் அறியாமையாகும். ஏற்கனவே குறிப்பிட்டது போன்று, ஆண் முளையில் மொழிக்கென ஒதுக்கப்பட்டுள்ள பகுதி மிகவும் சொற்பமானது என்பதனால், ஆரம்பத்தில் அவர்களுடைய தொடர்பாடல் என்பதே தவறாகத்தான் இருக்கும். உறவாடும் போது தொடர்பாடல்தானே மூலமாக அமைய வேண்டும். என்னுடன் பேச வேண்டும், கொஞ்சி குலாவ வேண்டும், கடலை போட வேண்டும் என்பவை எல்லாம் மொழி மூலமாகத்தானே முடியும். இதுதான் ஆணுக்கு இயல்பாக வராதே!!!
 
எனவே, இந்த வழியாகத்தான் பெண்ணை அடைந்துகொள்ள வேண்டும் என்பதனால் ஆண் மிகவும் துன்பப்பட வேண்டியதாயிற்று.
இந்த இயலாமையை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு ஆண் குறிப்பிட்ட விடயத்தை செய்து காட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதற்கு முயற்சி செய்தாலே அவர்களுக்கு புள்ளி கொடுத்துவிட வேண்டும். ஒரு விடயத்தை அவன் நினைத்தால் அவனுக்கு புள்ளி, செய்ய முயற்சித்தால் அவனுக்கு புள்ளி என்று இருக்கு வேண்டும். ஆனால் பெண்களோ! நீ செய்து முடி, பிறகுதான் புள்ளி கிடைக்கும் என்கிறார்கள். இந்த நிலமைதான் மாற்றம் பெறவேண்டும்.
 
ஆண் எப்படி பெண்ணை புரிந்து கொள்ள வேண்டும்?
 
இதனை ஒரு உறவாக ஆரம்பிக்கலாம். ஆண்கள் எப்போதும் எடுத்த மாத்திரத்தில் பெண்களின் குணத்தை பார்ப்பது கிடையாது. அவர்களின் அழகைத்தான் பார்ப்பார்கள். எனவே, அவர்கள் பெண்களின் வேறு எந்த அம்சத்தினையும் கருத்திற் கொள்வதில்லை என்பது அர்த்தமல்ல. அவர்களின் உடலியல் தோற்றத்தை கொண்டே மற்றய யாவற்றையும் அவர்கள் எடை போடுவார்கள். இது பொதுவாக ஒவ்வொரு ஆணுக்கும் வேறுபடும். அழகில் திருப்பதியுற்ற பின்னர், அடுத்து அவர்களின் ஆளுமையை கருத்தில் எடுப்பார்கள். அதனை அடுத்து அவள் ஒரு நல்ல குடும்ப பெண்ணாக இருக்க வேண்டும் என்பதில் அதிகம் அக்கரை காட்டுவார்கள். அவள் குடும்பத்தில் எப்படி வளர்க்கப்பட்டுள்ளாள், எங்கு அவள் வாழ்கிறாள், அவள் கிராமப் புறத்திலிருந்து வந்ததவளா, அல்லது நகர்புறத்தில் வழ்பவளா, அவளிடம் எனது எதிர்பார்ப்புக்கள் நிறைவேறுமா என்றெல்லாம் அலசுவார்கள். இதனை கருத்திற்கொள்கின்ற போது ஆண்கள் லிபரல் வகையினராகவும், கன்சவேட்டிவ் நிலையில் இருந்து சிந்திப்பவராகவும் காணப்படுவார்கள். இவற்றின் பின்னணியில் பெண்ணின் ஆடை முறை, ஸ்டைல், அவர்களின் உடல் வாகு, அவர்கள் கூடிப் பழகுகின்ற நபர்கள் மற்றும் நண்பிகள் முதலியன காணப்படுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை. 
 
இதில் சுவாரசியமான விடயம் யாதெனில், ஆண் ஆரம்பத்தில் பழகுகின்ற போது பெண் தன்னுடன் அழகாக பேச வேண்டும், தன்னைப் பற்றி அக்கரையாக இருக்க வேண்டும், தான் சொல்கின்ற விடயங்களுக்கு செவி மடுக்க வேண்டும், நான் கூறுகின்ற விடயங்களை செய்ய வேண்டும் என்றுதான் நினைக்கின்றான். சந்தோசமாக தாம் விரும்பவது போன்று இருக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறான். ஆனால் திருமணம் என்ற நிலைக்கு வருகின்ற போது, தனது குடும்பத்திற்கு பொருத்தமானவளாக அவள் இருக்க வேண்டும், தன் அம்மா சமைப்பது போன்று சமைக்க வேண்டும், அவர் கூறுகின்ற ஆடை மாதிரித்தான் அணிய வேண்டும், எனது குடும்பம்  கூறுகின்ற மாதிரித்தான் நடக்க வேண்டும், அவர்கள் கூறுவதுதான் எமது வழக்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும், அதுதான் சரி. எனது வீட்டில் எது நடந்தாலும் அதற்;கு நீ கட்டாயம் அனுசரித்து போக வேண்டும் என்று ஒரு கட்டளையை போட்டு விடுகிறான்.
 
எனவே இங்கு ஆண் மூளை இரண்டு நிலையில் செயல்படுவதை அவதானிக்கலாம். தான் சுதந்நதிரமான மனநிலையில் இருந்து கொண்டு தீர்மானம் எடுக்கின்ற போது தான் நினைப்பதையெல்லாம் முடிவாக கொள்கின்ற சந்தர்ப்பம். பின்னர் திருமணம் என்று வருகின்ற போது தனது தீர்மானங்களை விட்டுவிட்டு தனது தாய் தந்தையின், குடும்பத்தின் தீர்மானங்களை எடுத்து நடக்கின்ற நிலைக்கு ஆண் தொழிற்படுகிறான். திருமணத்தின் பின்பு நிகழ்கின்ற அதிகமான பிரச்சினைகள் இதனாலேயே ஏற்படுகின்றன. திருமணத்தின் முன்பு பெண் கூறுவதனை எல்லாம் கேட்டு நடந்த ஆண் திருமணத்தின் பின்பு தனது தாய் மற்றும் குடும்பத்தினர் கூறுகின்ற விடயங்களை அந்த பெண் எடுத்து நடக்க வேண்டும் என கூறுகிறான். இது மிகவும் சிரமமானது என்பதனால் அதிக பிரச்சினைகள் எழுகின்றன.
 
ஆண் பெண் உறவில் மத்திமமாக எது இருக்க வேண்டும்?
 
மத்திமமாக இருக்க வேண்டியது இருவருக்கும் இடையிலான தொடர்பாடலாகும். அதாவது, இருவருக்கும் இடையில் இளமைப்படுவத்தில் இருக்கின்ற அழகு, கவர்ச்சி முதலியன வயதாகும் போது தானும் கூடவே மறைந்துவிடும். எனவே வயதான காலத்தில் உறவை மகிழ்ச்சிகரமாக வைத்துக்கொள்வதாக இருந்தால் குறைந்தது அவர்கள் தமக்கு இடையில் பேசுகின்ற போது மகிழ்ச்சியாகவும்;, கிண்டல், நகைச்சுவை உணர்வுகளுடன் பேச முடியுமல்லவா. இவ்வாறு பேசுகின்ற போது மீதமிருக்கின்ற காலத்தை சந்தோசமாக கழிக்க முடியும். ஆவ்வாறில்லாமல் பேசுகின்ற போது இருவருக்கும் இடையில் சண்டையும் சச்சரவுகளும் ஏற்படுகின்றது என்றால் அத்தகைய உறவை சந்தோசமாக நீடிக்க முடியுமா?
 
எனவே, இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் ஒரு ஆணை நாம் எப்படி புரிந்து கொள்ள வேண்டும்? ஒரு பெண்ணை நாம் எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான். உண்மையில், ஒரு ஆணை அவனுடைய உடலியல் இயல்பையும் வைத்து புரிந்து கொள்வதுதான் ஆணைப் புரிந்து கொள்வது என்பதாகும். ஒரு பெண்ணை அவளுடைய உடலியல் இயல்பையும் வைத்து புரிந்து கொள்வதுதான் பெண்ணை புரிந்து கொள்வது என்பதாகும். இந்த விடயங்கள் இதுவரை காலமும் ஒரு சுவாரசிய விடயத்துக்காகவே பேசப்பட்டு வந்தன. வெறும் சிலேடைகளாகவே வரையறுக்கப்பட்டும் வந்திருக்கின்றன.
 

ஒரு ஆணின் உடல் மொழிக்கான அர்த்தம் என்ன? ஒரு பெண்ணின் உடல் மொழிக்கான அர்த்தம் என்ன? என்பதெல்லாம் ஒரு மர்மமான விடயங்களாகவே நோக்கப்படுகின்றன. ஒரு பெண் ஒரு விடயத்தை இந்த அர்த்தத்தில் கூறும் போது அது எந்த அர்த்தத்தில் விளங்க வேண்டும். ஒரு ஆண் பெண்ணிடம் இருந்து எதிர்பார்ப்பது என்ன? ஒரு பெண் ஆணிடத்தில் இருந்து எதிர்பார்ப்பது என்ன? அவர்கள் ஒருவரில் மற்றவர் எதை அதிகம் எதிர்பார்க்கிறார்கள்? எந்த சிறிய விடயமாக இருப்பது ஆணை வருத்தத்திற்கு ஆளாக்கிறது? எந்த சிறிய விடயமாக இருப்பது பெண்ணை வருத்தமுற செய்கிறது? இவற்றில் எந்தெந்த விடயங்கiளை மாற்றிக் கொள்ள முடியும் என்பதனை நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. இங்கு சில விடயங்கைளை பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டிய தேவையும் நம்மிடத்தில் இருக்கின்றன. அதேவேளை, சில விடயங்களை வளர்த்தெடுக்க வேண்டிய தேவையும் உள்ளது. எமது அடித்தளம் என்ன? மட்டுப்பாடுகள் என்ன?  தடைகள் என்ன? எங்கு அதனை விருத்தி செய்ய முடியும்? எங்கு அதனை விருத்தி செய்ய கூடாது? என்பதனை அறிந்து வைத்திருந்தால் எமது உறவுகள் மகிழ்ச்சிகரமாக நிலைக்க வழி ஏற்படுத்தும் அல்லவா.

கற்பனை காதல்கள்:((

நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பதில் மகிழ்ச்சி. என்ன செய்வது காலமும் நேரமும் சிலவேளைகளில் எம் மீதுதான் அதன் அப்பட்டமான புத்தியை காட்டிவிடுகிறது. பிரிந்து இருப்பதும், சேர்ந்து இருப்பதும், பிரித்து வைப்பதும், சேர்த்து வைப்பதும் அதன் மிக உன்னதமான பக்கங்கள். அந்த புத்தகத்தில் எமது பெயர்களும் இருக்கின்றதே! என்று சில வேளை மகிழ்ச்சியாய் இருக்கிறது. ஆனால் பலவேளைகளில் துக்கம் தலைக்கு மேலேறிவிடுகிறது. எல்லாம் நாம் எமக்கு செய்துகொண்ட கெடுதிகள்தான். 
 

வழமைக்கு மாறாக நேற்றைக்கு முன்தினம் வானொலியின் பக்கமாக எனது செவிகளை தாழ்த்தினேன். சென்றகாலத்தில் வெளியான பல்வேறு பாடல்கள் அங்கு ஒலித்துக்கொண்டிருந்ததனால் என் செவிகள் அங்கு திரும்பியிருக்கலாம். நேரம் செல்லும் போதுதான் புரிந்தது அது மிகவும் வித்தியாசமான ஒரு நிகழ்ச்சி என்று. ஆம் அது வாழ்க்கையில் சோகங்களை சுமந்து கொண்டு வாழ்கின்றவர்கள் அல்லது பல வகையான ஏக்கங்களையும், பாரங்களையும் இறக்கி வைக்க முடியாதவர்கள் இது போல் வேறு எவருக்கும் நடந்து விடக்கூடாது என்று எண்ணுகிறவர்கள் தம்முடைய சோக மூட்டைகளை இறக்கி வைத்துக்கொள்ளும் பொதுநலமிக்க வானொலி நிகழ்ச்சி அது. இப்போது உங்களுக்கு விளங்கியிருக்கலாம் எந்த வானொலியில் இந்நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது என்று.
 
ஆண்கள் பெண்கள் வித்தியாசமின்றி பல்வேறு நபர்கள் அழைப்பினை ஏற்படுத்திக்கொண்டு நிகழ்ச்சி ஒலிபரப்பாளருடன் தமது சோகக்கதைகளையும் தமக்கே உண்டான கெடுதிகளையும் அவர்கள் கூறிச்சென்றனர். சிலர் கூறும்போதே சேகத்தின் விழிம்புக்கு சென்று அழத் தொடங்கினர். சிலர் சோக மூட்டைக்குள் அழுகைளை இறுக கட்டி வைத்துக்கொண்டனர். அப்பாவிகள் சிலர் அவற்றை அழுதுகொண்டே கூறினர். இப்படி அதிலும் பலவகை. நடாத்தப்பட்ட நிகழ்ச்சியோ எல்லா சம்பவங்களுக்கும் பொதுவாகத்தான் இருந்தன. ஆனாலும் நான் வானொலியயை செவியேற்கத் தொடங்கியதிலிருந்து பங்கேற்றவர்கள் யாவரும் (சுமார் 11 பேர்) ஏதோவொரு வகையில் காதல் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களாகத்தான் இருந்தனர். அவர்கள் அத்தனைபேரும் காதலால்தான் உருக்குலைந்திருக்கிறாhர்கள் எனக் கேட்கம் போது மிகவும் பெருமையாக இருந்தது. அவர்கள் கூறிய கதைகள் எல்லாம் நாம் எற்கனவே கேள்விப்பட்ட கதைகள் அல்லது எமக்கு நிகழ்ந்த கதைகள் மாதிரியானவைதான். அது என்ன நீர் எம்மையும் இந்த வம்புக்குள் இழுக்கிறாய் என்று என்னை நீங்கள் கேட்கலாம். நான் யதார்த்தமாக பேச விரும்பகிறேன். உண்மையை கூறும்போது நீர் நான் என்று வேற்றுமையாக பேச முடியாதல்லவா.
 
இப்படி அவர்கள் சோகச் சமைகளோடு எடுத்து வைத்த காதல் கதைகளுக்கு நான் வைத்துக் கொண்ட பெயர்தான் கற்பனைக் காதல்கள். எதற்காக காதல் செய்கிறோம், ஏன் காதல் செய்கிறோம், காதல் என்றால் என்ன, எப்படி செய்வது, எப்படி செய்யக் கூடாது என்னவெல்லாம் இருந்தால் அது காதல், காதலில் எதுவெல்லாம் இருக்க கூடாது என்பன பற்றி தெளிவில்லாமல் புரிகின்ற காதல்தான் இந்த கற்பனைக் காதல்கள். இன்று காத்திரமான காதல்களை விட கற்பனைக் காதல்கள்தான் அதிகம். காரணம், நாம் எம் சூழலில் வெறும் கற்பனை உலகத்தில் வாழ்பவர்களைத்தான் அதிகம் காண முடிகிறது.
 
எதிர்பார்ப்புக்கள், அன்பின் பரிமாற்றம், காத்திருப்பு இவை மூன்றையும் தக்கவைத்துக் கொள்கிற காதல்தான் அதிகம் நீடிக்கின்றது, வாழ்கின்றது. அதற்கும் காரணம் இருக்கின்றது. இவை மூன்றும் வாழவேண்டும் என்பதற்காக உருவானவை. தோற்கடிக்கப்படுகிற கற்பனைக் காதல்கள் எப்போதும் இவற்றைக் கொண்டிருப்பதில்லை. மறுவாறாக கூறப்போனால் இவற்றை கொண்டிருக்காத காதல்தான் கற்பனைக் காதலாக மறைந்துவிடுகின்றன. குறுகிய எதிர்பார்ப்பானது முறையற்ற காதலுக்கு வழியாகிப் போகிறது. காதலில் அன்பின் பரிமாற்றம் சிலவேளைகளில் உருமாற்றம் நிகழ்ந்து உருக்குலைந்து போகிறது. மறுபறத்தில் காதல் வெறும் கற்பனையால் கருத்தரித்தது என்பதனால் காத்திருப்பு என்பதும் கனப் பொழுதில் மறைந்துவிடுகிறது. இவ்வாறான உறவில் அல்லது சூழலில் உங்களால் காதலை தேட முடியுமா?
 
காதலிக்கும் முன்னர் இருந்த அவசரத்தை விட காதலுக்கு பின்பு வருகின்ற அவசரம்தான் காதலருக்கு முதல் எதிரி என்பதனை காதலர்கள் புரிந்துகொள்வது கிடையாது. இப்படித்தான் வாழவேண்டும் என்பதற்கும், எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்பதற்கும் இடையில் இருக்கின்ற இடைவெளிதான் இங்கு அவசரம் எனக் குறிப்பிடுகிறேன். காத்திரமான காதலுக்கும் கற்பனைக் காதலுக்கு இடையில் உள்ள வேறுபாடும் இந்த அவசரம்தான். இப்படித்தான் வழவேண்டும் என்று வாழ்கிற போது அது ஒரு இலட்சியப் பயணம். இந்தப் பயணத்திற்கு நான்கு திசைகளும் தெரிந்திருக்கும், இங்கு பாதை முடிந்தாலும் பயணம் என்பது தொடரும். இந்த நிலை தவறி எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று செல்கின்றபோது அது கோணல் நிறைந்த பயணமாக இருக்கும். திசைகள் இருக்காது, பயணம் பற்றிய தெளிவும் இருக்காது, இடைநடுவில் முறிந்துவிடும்.
 
நேற்று வழியில் சென்று கொண்டிருக்கும் போது ஒரு விளம்பரப் பலகைளை சடுதியாக கண்ணுற்றேன். வாகனத்தில் வேகமாக சென்றதனால் பாருங்கள் அதனைக் கூட தெளிவாக எதைப்பற்றிய விளம்பரம் என்று அவதானிக்க முடியவில்லை. ஆனால் எப்படியோ தேவையானது கிடைத்தது. 

“Season for love and care”
“Season for give and share”

இங்கு நன்றாக கவனியுங்கள். நாம் எல்லோரும் நினைப்பது போன்று காதல் என்பது உண்மையில் எதையும் பகிர்ந்து கொள்வதற்கான தருணமல்ல. இவை அன்பாக, அரவணைப்பாக, நேசமாக, அக்கறையாக எதுவாக இருப்பினும் அவற்றை வெறுமனே பகிர்ந்து கொள்வதற்கான ஒரு இடமோ அல்லது பொருளோ அல்ல இந்த காதல். மாறாக அள்ளி வழங்குவதற்கான இடம்தான் இந்த காதல். வாழ்வியல் கருத்தில் பகிர்ந்து கொள்வதற்கும், அள்ளி வழங்குவதற்கம் இடையில் நிறையவே கருத்து வேறுபாடு உண்டு. காதல் என்பது எப்போதும் கவனிப்பு, அரவணைப்பு என்பதனைவிட மேலானது. எமக்குள் இடம்பெறுகின்ற அன்பையும், நேசத்தையும், அக்கறையையும் பகிர்ந்து கொள்வது என்பது நாம் முiiறாயக செலுத்துகின்ற வெளிப்பாடுதான் கவனம் என்றால் அது மிகையல்ல.
 
வெறுமையாக அல்லது வெளிப்பாடாக நிகழ்ந்த சம்பவங்களுக்காக நாம் பல தடவைகள் துக்கம் அனுஸ்டிக்க வேண்டியிருக்கிறது. துக்கித்து விட்டு தூர எறிந்துவிடுவதும் உங்களுக்கு அவ்வளவு சலபமான காரியமாக இருக்காது என்பது எனக்கு தெரியும். உலகில் காத்திரமான படைப்புகளுக்கு எப்போதும் தனிமரியாதையும், பாராட்டுக்களும் உண்டு. வாழிவியலிலும் அப்படித்தான் காத்திரமாகவும், தனித் தன்மையுடனும் வாழ்ந்து காட்டுபவர்களுக்கும் பாராட்டுக்களும், பட்டங்களும் வழங்குவதுண்டு. துன்பம் வருகின்ற போது துவண்டு விடுவதும், இன்பம் பெருகும் போது பொங்கி எழுவதும் மனித இயல்பு. மனித வாழ்க்கை இப்படியாகத்தான் கட்டமைக்கப்பட்டுள்ளது. வாழ்வு என்பது முழுiமாக மகிழ்ச்சி நிறைந்ததாக இருந்தால் வாழ்வில் எந்த இரசனையும் இருக்காது. அதேவேளை, வாழ்வு முழுவதும் துன்பமும், துர்டமும் நிறைந்ததாக இருந்தால் அவ்வாழ்வில்  எமக்கு எதுவித ஈடுபாடும் இருக்காது. எனவே, வாழ்க்கையை இரசனையோடும், முழுமையான ஈடுபாட்டுடனும் கழிக்க வேண்டுமானால் எமக்கு துன்பமும் இன்பமும் கலந்த வாழ்க்கை ஒன்று மிக அவசியமாகிறது.
 
காலம் பொன்னானது என்று கூறுவதனை நான் பல தடவைகள் கேட்டிருக்கிறேன். ஆனால் அதனை உறுதியாக கூற உனக்கு முடியாது. ஆனால் நான் எனது அறிவுக்கு எட்டிய வகையில் ஒன்றை மட்டும் இங்கு கூறுகின்றேன். கடந்தகாலம் பற்றி சிந்திக்காதீர்கள். எதிர்காலம் பற்றியும் கற்பனை செய்து கொள்ளாதீர்கள். இன்று என்ன செய்வது என்று மட்டும் அதிகம் கவனம் செலுத்துங்கள். நேற்று என்பது பலருடன் அல்லது பலவற்றுடன் சேர்ந்து நிறைவடைந்திருக்கும், நாளை என்பதும் பலருடனும், பலவற்றுடன் சேர்ந்து நிறைவுபெற துடிக்கும். இன்று மட்டும்தான் என்னோடு மாத்திரம் தொடர்புற்றதாக கூடவேயிருக்கும்.
 
"அழும்போது தனிமையில் அழு
கூட்டத்தோடு நீ அழுதால் அதனை அவர்கள் நடிப்பு என்பார்கள்.
சிரிக்கும் போது கூட்டத்தோடு சிரி.
தனிமையில் நீ சிரித்தால் அதனை அவர்கள் பைத்தியம் என்பார்கள்."
என்பது கண்ணதாசன் எழுதிய வரிகள்.

இங்கு நானோ! தனிமையில் அழுகிறேன்.
நீயோ கூட்டத்தோடு சிரிக்கிறாய்.
வித்தியாசம் ஒன்றுமில்லை.

பெண்களுக்கெதிரான வன்முறை: இது எனது கதை


இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் என் முதல் ஆண்டு இறுதி தேர்வில் அமர்ந்தேன். இறுதியாக கடந்த மாதம் வெளிவந்த 'வணக்கம்" இதழ் கே.டி. பிறவுனிடமிருந்து பெற்றுக்கொண்ட ஆடை வடிவமைப்புக்களை மூன்று பக்கங்களுக்கு குறையாமல் வெளியிட்டிருந்தது. இதற்கு விளம்பர அழகியாக இருந்தது நான்தான். நான் எதிர்வருகின்ற மார்கழி மாதத்தில்> ஆசியா பசுபிக் -2011 சூப்பர் விளம்பர அழகியாக தொலைக்காட்சியில் வலம் வருவேன். நான் என்னைப் பற்றி எந்த பிரம்மைகளையும் உண்டுபண்ணிக் கொண்டது கிடையாது. எனக்கு ஒளிக்கமரா முன்னிலையில் தோன்றுவதற்கு அத்தனை கூச்சம் அத்துடன் வயதும் 26> பட்டப்படிப்பினை தொடங்கியுள்ளேன். இருந்தும், என்னைப் பொறுத்தவரையில் இத்தனை அடைவுகளும் எனது சாதனைதான். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நான் தவறான ஒரு திருமண பந்தத்தில் சிக்கிக்கொண்டேன். நான் எப்போதும் தன்நம்பிக்கையை கொண்டவள். கட்டுப்பாடும் கூடவே சுயமாக தீர்மானம் மேற்கொள்ளும் துணிவும் என்னுடனேயே பிறந்தவை. இத்திருமணம்தான் எனது தன் நம்பிக்கையினை சீலம் சீலமாக கிளித்தெறிந்தது. தொலைந்து விட்ட கனவுகளும், தோய்ந்துபோன வடுக்களும் இருதயத்துள் எண்ணிலடங்கா

நான் திருமணம் செய்து ஐந்து ஆண்டுகளுக்குள் எனக்கு என்னவெல்லாம் நடந்தன என்பதனை பேசுவது அவ்வளவு சுலபமான காரியமல்ல. தற்போது என்னைப் பற்றி முழுமையாக என்னால் கூட உணர முடியாத சோகம். இதையெல்லாம் நான் இங்கு கூற காரணம் உண்டு. எனது கதை அல்லது அதன் ஒரு பகுதியாவது இதனை கேட்கும் உங்களில் எவரையாவது தட்டியெழுப்பும் என்பதனால்தான் இங்கு அவற்றை கூறுகிறேன். இளமையின் துள்ளலும், அதன் வேகமும் என்னை 18 வயதிலேயே திருமணத்திற்கு கொண்டு சேர்த்தது. எனது இந்த அறியாமைதான் என்னவோ, அவனுக்கு சமமாக  என்னையும் நடாத்த தயங்கிய ஒருத்தனோடு ஐந்தாண்டு காலம் திருமண உறவில் முடக்கி வைத்திருந்தது. இலங்கையில் வாழ்கின்ற ஏனைய ஆண்களிடம் இருக்கின்ற பழக்கமும், நடைமுறையும்தான் அவனிடமும் அப்பழுக்கற்ற விதத்தில் இருந்தன. என்னைத் தவறாக எண்ணாதே - நான் பெண்ணிய வாதி இல்லை. எல்லலோரும் அணிவதில்லை என்று தீர்மானிக்கின்ற வேளையில் ஆடைகள் யாவற்றையும் எரித்துவிடுவதில் என்னதான் நியாயம் இருக்கப்பபோகிறது. இதன் பின்னணியில் நான் எந்தவொரு காரணத்தினையும் காணவில்லை. எனக்கு எது உண்மையோ அதைத்தான் நான் பின்பற்றுகிறேன், பின்பற்றுவேன்.


நான் அண்மையில் நடந்த நிகழ்வொன்றில் கோவில் மதகுரு ஒருவரின் உரையொன்றை செவிமடுத்தேன். அவர் முன்பள்ளி ஒன்றினை நடாத்துவதாகவும், குழந்தைகளுடன் வேலை செய்வதன் மூலமாக அவருக்கு கிடைக்கும் ஆனந்தத்தினையும் மனதாற எடுத்துக் கூறினார். மேலும் அவர் அத்தனை குழந்தைகளையும் அவர் கவனித்துக் கொள்கின்ற போது 'துக்கம் அவரை படர்ந்து கொள்ளும்' என்றார். இதே போன்றுதான் நானும், பெண்கள் எப்படி வாழக் கூடாதோ அப்படியானதொரு வாழ்வினை அவர்கள் வாழ்கின்ற போது துக்கித்து வேதனையால்  தவித்துவிடுவேன். சோகமும் கூடவே கோபமும் தவிர்க்க முடியாதன. பெண்கள் தமது உரிமைகளுக்காக எழுந்து போராட தவிக்கின்ற போதும், அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குட்படுத்தப்படும் போதும், பெண்கள் பாரபட்சத்தின் கெடுதியால் அல்லலுறுகின்ற போதும், அவர்களுக்கு எதிரான வன்முறைகள் சாதாரணமாக நடந்தேறுகின்ற போதும் எனக்கு கோபம் வருகிறது.


எனக்குத் தெரியும், இது எதைப்போல் என்றால்! உனது கருத்தைச் சொல்கிற போது தாக்கப்பட்டாய், உன்னுடைய மறுபதிலுக்கும் தாக்கப்பட்டாய், தாக்கப்பட்டாய் ஏனெனில் நீ கூறியது அவனுக்கு பிடிக்கவில்லை, தாக்கினான் ஏனெனில் அவன் குடித்திருந்தான். அடி விழுந்தது ஏனெனில் நீ நினைத்திருந்தாய் உனக்கு உரிமைகள் இருக்கின்றதாக, அவற்றை நீ கேட்டாய். துயரத்தில் சிக்கித் தவித்தாய் ஏனெனில் உன்னிடம் சிறந்த தகுதிகள் இருந்தும் அவற்றுக்காக நீ போராட்டம் நடாத்தினாய். வேதனையின் வக்கிரமம் உன்னை ஆட்கொண்டது ஏனெனில் அவன் நினைத்தான் நீ அவனை மதிக்கவில்லை என்று. சின்னஞ்சிறு அற்ப விடயங்களுக்காகவும் நான் தாக்கப்பட்டேன், சுக்கு நூறாக தகர்க்கப்பட்டேன். இவைகளால் உனக்கு என்ன புரிகிறது என்பது எனக்கு விளங்குகிறது. உன்னிடம் எதுவும் கிடையாது, உனது பெற்றோர்கள் எதற்கும் கையாலாகாதவர்கள், நீ எங்கிருந்து வந்திருந்தாலும் உனக்கு எந்த பெறுமதியும் கிடையாது.


எத்தனை எத்தனை பொய்களையெல்லாம் நாம் நம்பவேண்டியுள்ளது என்பது எனக்கும் தெரியும்


காவல் நிலையத்தில் காத்து நிற்கின்றதன் கொடுமை எனக்கு தெரியும். காவல் நிலையத்தில் அவர்கள் என்னை பார்த்து கேலியாக சிரிக்கின்ற போதும், நீதான் தவறானவள் என்கின்ற வகையில் அவர்கள் இழிந்து நோக்கும் பார்வையின் வலியும் மிக்க வேதனையானதுதனிமையில், அழும் குழந்தைகளை கையில் ஏந்திக் கொண்டு, கூச்சமும கூடவே அச்சமும் நிறைந்த மனத்துடன் எத்தனை பெண்கள் எமது நாட்டில் இருக்கிறார்கள். இவையெல்லாம் அரக்க குணமுள்ள மனிதனை தன்னிடமிருந்து விடுவித்துக் கொள்ளவதற்காக மேற்கொள்கின்ற போராட்டத்தில் எதிர்கொள்ள வேண்டிய வலிகள் என்பது எனக்கு தெரியும். ஆனால் அது மிகவும் பயங்கரமானது. இன்னும் மனைவியை பார்த்துக்கொள்வதிலும், தன் குழந்தையின் தாயை பராமரிப்பதிலும், அவளுடைய உரிமைகளை மதிப்பதிலும் பாரிய பொறுப்பு அவனுக்கு உள்ளது என்பதனை நீ பின்ர்தான் அறிந்து கொண்டாய். என்றாலும், அவனுடை குழந்தையின் பொருட்டு சேர்ந்து வாழ்வதுதான் விதியென உன்னுடைய உள்ளுறுப்புக்கள் உணர்த்துவதனை நானும் ஆத்மார்த்தமாக ஏற்றுக்கொள்கின்றேன்.


இது நடுநிசியில் வீட்டை வெளியில் பூட்டிவிடுவதைப்போல, ஏனெனில் அவன் அதனை உனக்கு செய்ய முடியும் என அவன் நினைக்கிறான். சிலவேளை, நீ அச்சத்தினால் திக்கமுக்கு அறியாது திணறுவதும், அவ்வப்போது கண்ணீரினால் உனது படுக்கை விரிப்பை நனைத்துக் கொள்வதும் இதனால்தான். எனக்குத் தெரியும், நீ மெய்யாகவே இத்தனை வன்முறைகளிலிருந்தும் உன்னை விடுவித்துக் கொள்ள நினைக்கின்ற வேளையில், 'உனக்கும் காலம் வரும், அது உன்னுடைய அத்தனை துன்பங்களுக்கும் முடிவுகட்டும், காலம் விடைகொடுக்கும், அவனை மாற்றிவிடும், நீ பொறுமையாக இரு" எனவெல்லாம் உன்னைச் சுற்றியுள்ளவர்கள் கூறுவார்கள். இப்படி எத்தனை பெண்கள் இன்று இந்தக் கனவின் ஆழத்துள் தம்மை தாமே மூழ்கடித்துக்கொண்டு மூச்சுத் திணற வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்? எத்தனை பெண்கள் 'பொறுமை" என்பதனையே சந்தோசமான குடும்ப வாழ்வின் மூலாதாரமாக சொல்லி சொல்லி அடுப்பங்கரைக்குள் முடக்கப்பட்டிருக்கிறார்கள்? குனியக் குனிய குட்டுப்பட்டிருக்கிறார்கள்? இன்னும் எத்தனை பெண்கள் தாங்கள் பெற்றெடுத்த குழந்தை செல்வங்களின் முகத்துக்காக வாழ்ந்து தொலைக்கின்றார்கள்? எத்தனை பெண்கள் தங்கள் கணிவனிடம் பேசும் போது கவனமாக பேசும்படி ஏவப்பட்டிருக்கிறார்கள்? அவரிடம், கணவனுக்கு பயந்து நடந்துகொள் என முடக்கப்பட்டிருக்கிறார்கள்? கோவிலுக்கு செல்லஎழுதுவதற்கு? பாவமன்னிப்பு கோர? பூசைகள் நடாத்த? கடவுள் பக்தியில் ஈடுபட? மேலும், எத்தனை பெண்கள்தான் தாக்கப்படுவதற்கு மேலதிகமாக, அநியாயமாக அவதூறுகளையும், பழிகளையும் சுமக்க வேண்டியிருக்கிறதுஎத்தனை பெண்கள் இத்தனை குற்ற உணர்வோடு தம் வாழ்நாள் பூராகவும் வேதனைகளை சுமந்துகொண்டிருக்கிறார்கள்இவர்களை இவ்வாறு நடாத்தக் கூடாதென உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?


பெண்களுக்கெதிரான வன்முறை பற்றியும், அதனை முக்கியப்படுத்தும் கல்விக்கும் இங்கு நிறையவே பஞ்சம் நிலவுகிறது. பேச மறுக்கப்படுகின்ற விடயத்திற்காக நாம்தான் பங்களிப்பினை வழங்க முடியும். குடும்ப வன்முறையின் எதிரும் புதிருமான பக்கங்கள் வெறும் சித்திரங்களாலும், குறியீடுகளாலும்தான் மேலும் மேலும் சித்தரிக்கப்பட வேண்டுமா? ஆனால் நாம் ஏன் அதனைப் பற்றி பேசுவது கிடையாது? எம் போன்ற நடுத்தட்டு அல்லது மேல்தட்டு குடும்பங்கள் நினைப்பது குடும்ப வன்முறையின் தாக்கம் பாமர மக்களிடமும், ஏழை எளியவர்களிடமும்தான் காணப்படுகின்றன என்று. எவ்வாறோ! ஏற்றுக்கொள்ள முடியாத உண்மை என்னவென்றால், குடும்ப வன்முறையானது எல்லா இடங்களிலும் காணப்படுகின்றது. கீழ் வர்க்கமாக இருப்பினும் சரி, மேல் வர்க்கமாக இருப்பினும் சரி பெரும்பாலான வீடுகிளில் அது இடம்பெறுகின்றது. இன்னும், எங்களில் பெரும்பாலோர் அவமானம் என்கின்ற ஆடைக்குள்  
ஒழிந்து கொண்டு அதனைப்பற்றி பேச மறுக்கின்றோம்.


இதனை படிக்கின்ற இளைஞர்களே! உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். உனது அப்பா உன்னுடைய அம்மாவின் மனதை புண்படுத்தவில்லையா? அல்லது உனது அப்பா அம்மாவை நோவினை செய்யவில்லையா? யுவதிகளே! உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். வீட்டைவிட்டு வெளியேறிச் சென்று உங்களால் எந்த அளவில் சமூக வாழ்வில் பங்கெடுக்க முடிகிறது? உன்னுடைய அம்மாவின் வாழ்க்கை பாதை எத்தனை கரடுமுரடானதாக இருக்கிறது? உனது அன்புக்கு பாத்திரமான தந்தை அம்மவை எப்படியெல்லாம் வதை செய்கிறார்? ஆம், இவைக்கு விதிவிலக்குகளும் இல்லாமலில்லை. ஆனால் நான் அவர்களுக்காகவோ, அவர்களைப் பற்றியோ இங்கு பேசவில்லை. இன்று எவர்கள் இவை போன்ற காரணிகளால் வதைகளுக்கும் வற்பறுத்தல்களுக்கும் ஆளாகின்றார்களோ அவர்கள் யாவருக்காகவும்தான் நான் இங்கு பேசுகின்றேன். மேலும், எவர் சமத்துவம் பற்றி பேசகிறாரோ, எவர்கள் உள்ளத்திற்கு இதமளிக்கும் உளவளத்துணை பற்றி அக்கரை கொள்கின்றாரோ, வாழ்வின் கட்டங்களுடன் துணிச்சலாக பேராடுகின்ற வாழ்க்கை துணைகளின் நலன்களை காக்க எவர்கள் முன்வருகின்றனரோ, எவர்கள் உள்ளாரக் கிடக்கின்ற ஆத்திரங்களை அழித்துவிட பொறிமுறைகளை தேடுகின்றனரோ அத்தகைய ஆண்களுக்குமாகத்தான் நான் இங்கு பேசுகின்றேன். இவைகள்தான் உன்னுடைய துணையுடன் சுகமானதும், சுமுகமானதுமான உறவினை வாழ்வதற்கு நிலையான அடித்தளத்தை கட்டியமைக்கின்றன. நான் உன்னுடன் பேசுகிறேன் - ஏன், நீ பேசக் கூடாது? இத்தகைய நடத்தைகளும், மனப்போக்குகளும் நேரடியாக 'இல்லை" என்று பெயரிடப் பட்டுவிடக் கூடாது.


எத்தனை தாய்மார்கள் தங்களுக்கு விருப்பமில்லாத திருமணத்துடன் பிள்ளையின் முகத்துக்காக, அவர்களின் எதிர்காலத்துக்காகவும் இன்று குடித்தனம் நடாத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலமையில் வீட்டில் நடக்கின்ற விடயங்களில் சரி எது? பிழை எது? என்பதனை பிரித்தறிவது எத்தனை கடினமானது. எத்தனை பெண்கள் அவர்களுடைய ஆண் பிள்ளைகளுக்கு பெண்களை நியாயமாக நடத்தும்படியும், அவர்களுடைய உரிமைகளை மதித்து நடக்கும் படிம் அறிவுரை கூறுகின்றார்கள்? எத்தனை பெண்கள் கணவன்மார் தங்களை விரும்பியபடி நடாத்த அப்படியே விட்டுவிடுகிறார்கள்? பெண்கள் தரப்பில் துணிச்சல் துளியளவும் இல்லாதவரை வரை, அவர்களிடத்தில் சில மடத்தனங்கள் உலவித்திரியும் வரையில் வன்முறை சக்கரம் சுழன்று கொண்டுதான் இருக்கும். ளர்ந்த ஆண் பிள்ளைகள் அவர்களுடைய பெண்களையும் (அவர்களுடைய எண்ணம் எவ்வாறிருப்பினும்) அநியாயாமாக நடாத்த ஆரம்பித்து விடுவார்கள். அத்துடன் வயது வந்த பெண் பிள்ளைகளும் திருமண பந்தத்தில் இணைந்து கொள்ள பின்வாங்குவார்கள். திருமணம் என்பது சந்தி சிரிக்கும்படியாக அமைந்துவிடும். அத்துடன் பிள்ளைகள் (என்போன்ற) குடும்ப உறவுகளை அறுத்துவிட்டு தொலைவில் எங்கோ சென்றுவிடுவார்கள். ஆனால், என்னிடம் பெறுமதியான கேள்வி ஒன்று உள்ளது. அப்பாக்கள் இல்லாத குடும்பங்களில் ஏற்பட்ட உடைவுகளை விட, அப்பாக்கள் இருக்கின்ற குடும்பங்களில் ஏற்பட்ட உடைவுகளும் சரிவுகளும் எத்தனை குறைவானது? நிச்சயமாக குறைவானதல்ல.


நான் இங்கு கூறியது எனது கதையை மட்டும்தான். ஏனெனில் எனக்கு வயதாகிவிட்டது, எனக்கு புத்தியிருக்கிறது, நான் தற்போது பலமான ஒருத்தி. ஆனாலும், குடும்ப வன்முறையை பொறுத்தவரை வெறும் சகிப்புத் தன்மையுடன் நடந்துகொள்வதனை விட இது பற்றிய சம்பாசனைகளும், அங்கீகாரமும், அதிகளவிலான ஆதரவும் அவசியம் தேவை. இலங்கையை பொறுத்தவரையில் அது நெடுந்தூரம் பயணிக்க வேண்டியிருக்கின்றது. அதன் நீதி முறைமை என்பது வெறும் தாமதத்தினாலும், நிருவாக சீர்கேடுகளாலும், கையூட்டல்கள் மற்றும் முறைகேடுகளாலும் சிதறடிக்கப்பட்டு காணப்படுகிறது. திருமணம் குலைந்து மூன்றாண்டுகள் கடந்துவிட்டன என்றாலும், நான் தேடுகின்ற நீதியை பெற்றுக்கொள்ள இன்னும் காத்திருக்கின்றேன். சட்ட முறை இன்னும் பலமான வகையில் கட்டமைக்கப்பட வேண்டும். நன்மதிப்பு வாய்ந்த சட்டத்தரணிகள் எமக்கு தேவை. அவர்கள் எப்போதும் நீதிமன்ற வளாகத்தினுள் நிலவுகின்ற முறைகேடுகளுக்கும், கையூட்டல்களுக்கும் முடிவுகட்டுபவர்களாக இருக்க வேண்டும். உளமாற சிகிச்சையளிக்கின்ற உளவளத்துணையாளர்களும் எமக்கு தேவை. கல்வி என்பதனால் ஒரு தொழிலை பெற்றுக்கொள்ள முடியும் என்றும், அதனால் தாம் சுயமாக சம்பாதிக்க முடியும் என்று விளங்கிக்கொள்கின்ற பெண்களும் எமக்கு தேவை. நம்பிக்கைக்கு பாத்திரமான குழந்தைப் பராமரிப்பும், நம்பிக்கைக்கு மாசு ஏற்படுத்தாத பொலிஸ் அதிகாரிகளும் எம்மிடம் வேண்டும். ஆமாம், இவைகளை விடுத்தும் நாம் வெகு தொலைவில்தான் இருக்கின்றோம்.


அனால் இன்று, நான் ஓங்கி ஒலித்திருக்கிறேன். நாளை நீ அதனை செய்வாய் என நம்புகின்றேன். அத்துடன் நாளை மறுநாள் அதிகம்; பேர் இதனைப் பற்றி பேசுவார்கள். அடுத்த சந்ததியில் எமது பிள்ளைகள் இவற்றிலிருந்து பயன் பெறுவார்கள்.


இந்த நாட்டில் இளவயதில் தாய்மை அடைவதென்பது ஒன்றும் இலகுவான காரியமல்ல. நான் எல்லா வேளையிலும் எதாவது காரியம் பற்றி உடனடியாக தீர்மானம் செய்துவிட முற்படுகின்றேன். முச்சக்கர வண்டி ஓட்டுனர், முதலாளிமார், மனம் நிறைய அழுக்குகளை சுமந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், மானம் கெட்ட அயலவர்கள், வக்கிர புத்தியுடைய சக உறவினர்கள், முறைகேடான ஆசிரியர்கள்,  பாடசலை அதிபர் என்று மொத்தத்தில் எத்தனபேரைப் பற்றி நான் கவலைப்படுவது. இறுதியில் நான் உணர்ந்து கொண்டது இதுதான். தனித்த பெண்ணொருத்தி அல்லது தாயொருத்தி முகம்கொடுக்கின்ற இன்னல்கள் யாவும் ஏதோவொரு விதத்தில் மூகம் கற்பிக்கின்ற களங்கம்தான்.


இன்னும் நான் காலையில் கண்விழித்தெழுகின்ற பொழுது, எனக்குத் தெரியும் அந்த நாள் எனக்கே உரித்தானது. நான் வடித்து வைத்த குறிக்கோள்கள் யாவும் என்னுடையவை, அடைந்த இலக்குகளும் அப்படியே எனக்கு சொந்தமானவை, நான் செய்த தீர்மானங்களும் எனக்கே சொந்தமானவை. அதேபோன்று இந்த பிள்ளையும் என்னுடைது, நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.   


நீதி எல்லோருக்கும் கிடைக்கக் கூடியதுதான் ஆனால் காலம் எடுக்கும்.