கடவுள் இறந்துவிட்டார்

நானும் எனது நண்பனும் வழமைபோன்று காலிமுகத்திடலில் ஒருவரை ஒருவர் பேசிக்கொண்டிருந்தோம். சில நிமிடங்களாவது இந்தக் கொழும்பில் சுயாதீனமாகவும், சுதந்திரமாகவும், சந்றேனும் அமைதியினை உருசிப்பதென்றால் இப்படியாக காலிமுகத்திடலை நோக்கி புறப்பட்டு சென்றுவிடுவோம். சுமார் இரவு 9 மணியிருக்கும், நாங்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தோம். திடீரென அவ்விடத்தில் வெளிப்பட்ட ஒரு சிறுவன் தன்னிடம் வடையும், கடலையும் இருப்பதாகவும் எங்களை வாங்கிக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டான். அப்படியே நான் அவனை உற்று நோக்கினேன். இதனை அவதானித்த எனது நண்பனும் தலையை குனிந்து கொண்டு சகிக்க முடியாத உணர்வினை தன்னுள்ளே முழுங்க முயற்சிப்பது புரிந்தது. நானும் அந்த சிறுவனை அப்படியோ உற்று நோக்கி விட்டு உனது பெயர் என்ன என்று விசாரித்தேன். அதன் பின்னர் அவனை மேலும் விசாரிக்க தொடங்கினோம். அப்பொழுது அவனில் ஏதோ மாற்றம் உருப்படுவதனை நாங்கள் இருவரம் அவதானித்துக்கொண்டோம். 

அந்த தம்பியின் ஊரைப் பற்றி வினாவிய பொழுது அவன் கூறிய ஊர் என்னையும் எனது நண்பனையும் ஒரு வினாடி திடுக்கிடச் செய்தது. காரணம் அது எனது நண்பனுடைய ஊர்தான். அப்படியே சுதாகரித்துக் கொண்ட நாங்கள் அவனை அப்படியென்றால் அந்த ஊரில் எவ்விடத்தில் உங்களுடைய வீடு உள்ளது என்று கேட்டேன். அப்போது, அவன் வயதில் சுமார் 11 (அவன் ஆறாம் ஆண்டு படிக்கின்றானாம் என்றான்) வயதுதான் இருக்கும் எங்களை சமாளிக்க முடியாமல் தடுமாறுவது புரிந்தது. நானும், அதுவரையில் அவனை விசாரித்த அனைத்தையும் விட்டுவிட்டு "உன்னுடைய வாப்பா என்ன வேலை செய்கின்றார்" எனக் கேட்டேன். அவர் கொழும்பு பொது வைத்தியசாலையில் சிறுநீரகப் பிரிவில் சத்திர சிகிச்சை முடிந்து சிகிச்சை பெற்று வருவதாக கூறினான். அத்தோடு உன்னுடைய தாய் எங்கே என்று வினாவிய போது அவரும் காலி முகத்திடலின் மறுபக்கத்தில் வடையும் கடலையும் விற்றுக் கொண்டிருப்பதாக கூறினான். நீங்கள் கொழும்பில் எங்கு இருக்கின்றீர்கள் என்ற கேட்டதற்கு சிலேவ் ஜலண்டில் வசித்து வருவதாக கூறினான். அப்போது எனது நண்பன் 'அப்படியென்றால் நீ முன்பு கூறியவையெலல்லாம் பொய்தானே' என்று கேட்க அவன் தலையை குனிந்து நின்று கொண்டிருந்தான். சரி என்று கூறிவிட்டு என்ன செய்வது அவனிடம் இருந்த கடலைப் பையில் இரண்டையும் வடையில் சிறிதளவும் வாங்கிவிட்டு அவனை விட்டு விட்டோம்.

இப்படியோ சற்று நேரம் தாமதித்த நேரத்தில், நாங்கள் வாங்கியவற்றை உண்டு முடித்திருக்கவில்லை. அதேவேளை மற்றொரு பெண் அவளுடைய கையை ஏந்திய வண்ணம் எங்களை அணுகி வந்தாள். எனது நண்பன் வசாரணையினை ஆரம்பித்தான்.  சுமார் 15 நிமிடங்கள் வரை நாங்கள் இருவரும் சேர்ந்து அவளை நோக்கி வினாக்களை தொடுத்தோம். அவள் மட்டக் குளியில் வசித்து வருகின்றாள். அவளுடைய பிறந்த இடம் பதுளை. பிறப்பில் ஒரு தமிழ் பெண். அவளுடைய கணவன் அவளை இஸ்லாத்திற்கு மாற்றி திருமணம் செய்துதான் கொழும்பிற்கு கூட்டி வந்திருக்கிறான். தற்போது அவளை விவாகரத்து செய்துவிட்டான். ஆனால் அவளை எனது நண்பன் விசாரித்த போது அவளுக்கு இஸ்லாத்தினைப் பற்றி எதுவும் தெரியாது. அவளுக்கு கலிமா கூட தெரிந்திருக்கவில்லை.  காலிமுகத்திடலில் அவளுக்கு ஒருநாளைக்கு சாராசரியாக 1500 ரூபா தொடக்கம் 2000 ரூபா வரையில் வசூல் கிடைக்கின்றது. சனி மற்றும் ஞாயிறு தினங்களில் 2000 சூபா தொடக்கம் 2500 ருபா வரையில் , சில வேளை 3000 சூபா வரையில் கிடைப்பதாக கூறினாள். பிள்ளைகள் இரண்டு இருக்கின்றது. கணவனால் எந்த உதவியும் இல்லாததன் காரணமாக இந்நிலமையாம். இவளுடைய நிலையினை கேட்ட பின்பு நீங்கள் கூறலாம் இவள் பொய் கூறுகின்றாள் என்று. ஆனால் அதற்கும் அவள் ஒரு சான்றினை என்முன் வைத்தாள். நீங்களும் அதனை இங்கே காணலாம். இரவு வெளிச்சத்தில் மிகத் தெளிவாக அதனை படம் எடுக்க முடியவில்லை.











 





இம்மாதம் 15ம் திகதி, விடுமுறை நாள். தெஹிவளையில் வேலை ஒன்றினை முடித்துவிட்டு வழி திரும்புகையில் வெள்ளவத்தை காகில்ஸ் பூட்ஸ் சிட்டியின் அருகில் சிறிது நேரம் எனது நண்பனுக்காக காத்து நிற்க வேண்டி ஏற்பட்டது. நின்றதுதான் தாமதம், ஒருவர் என்னை அணுகி அவரிடம் உள்ள பொருளை காட்டி என்னை வாங்கிக் கொள்ளுமாறு கூறினார். அவை வேறு ஒன்றுமில்லை, வீடுகளில் பீங்கான் கோப்பைகள் கழுவுகின்ற பஞ்சுத் துண்டங்களும், அவற்றை உராய்சி கழுவ உதவுகின்ற கம்பி இழைகளினால் தயாரிக்கப்பட்ட பொத்தியும்தான் அவரிடம் காணப்பட்டது. நான் அவற்றை வாங்கி என்ன செய்வது என்ற நோக்கில் வேண்டாம் என்று கூறிவிட்டேன். அவன் மீண்டும் இருதடவை 'வாங்கிக்கோங்க' என்று கூறினான். நானும் வேண்டாம் என்று கூறிவிட்டேன். சடுதியாக அவன் 'நான் முஸ்லிம்தான்'; என்று கூறினான். அப்போது அதிர்ந்து போன நானும், 'இல்லை வேண்டாம்' என்று கூறி சற்று கோபமாக பார்த்தேன், சென்றுவிட்டான்.  நான் அவனிடம் பொருட்களை வேண்டாம் என்று கூறியபோது அவன் ஏன் தன்னை முஸ்லிம்தான் என்று கூறி அதனை எனக்கு தெரியப்படுத்தினான் என்று இதுவரை எனக்கு சரியாக புரியவில்லை. சிலவேளை நான் அவனிடம் பொருட்களை வாங்கி அவனுக்கு உதவ முன்வராததன் விளைவாக நான் முஸ்லிம் என்பதனை அவண் அடையாளம் கண்டுடிருப்பானோ!

அப்படியே அவ்விடத்தில், 5-10 நிமிடங்கள் கடந்திருக்கும். 17 -21 வயது மதிக்கத்தக்க பெண் ஒருத்தி தனது, பால்குடி மறவாத குழந்தையுடன் என் முன் வந்து வாசைன குச்சிகள் அடங்கிய மூன்று பெட்டிகளை காட்டி 'சேர் மூன்றுக்கும் 50 ரூபா சேர்' என்ற போது என்னால் என் மனத்தினை கட்டுப் படுத்திக் கொள்ள முடியவில்லை. அவளை நேரெதிரில் எதிர்கொள் எனக்கு இயலாமல் போனது. பின்பு அவ்விடத்தில் எனது நண்பனை சந்தித்த பின்பு அந்த பெண்ணிடம் சென்று நீங்கள் எந்த இடம் என்று கேட்டேன். அவள் கொலன்னாவை என்று பதிலளித்தாள். கணவன் கூலி வேலை செய்கிறானாம். ஆனால் அந்த சகோதரி அவளுடைய  பெயரை மட்டும் என்னிடத்தில் பொய்யாக கூறினாள் என்பது எனக்குத் தெரியும்.  அவளும் முஸ்லிம்தான் ஆனால் அவள் தன்னை ஒரு தமிழ் பெண் போன்று மறைத்துக் கொண்டாள். சில வேளை அவள் என்னை ஒரு இழிந்த சமூகத்தின் வெட்கம் கெட்ட ஒரு அங்கத்தவனாக நேக்கியிருக்கலாம். அல்லது அவளுக்கே அவள் முஸ்லிம் எனக் கூறுவது அவமானமாக இருந்திருக்கும்.

இன்று மருதானை வழியாக சென்று கொணடிருந்த நான் பள்ளிவாயலின் அருகில் ஒரு சகோதரியினை அவதானித்தேன். சுமார் 16-18 வரை வயது மதிக்கத்தக்கவள். இரு கைக்குழந்தைகளுடன் பள்ளிவாயலின் முன்றலில் இருந்து கொண்டு தனது குழந்தைகளை மடியில் போட்டுக் கிடப்பதனை காண்கையில் மீண்டும் நான் எதனைக் கூறுவது....???

சிலவேளை, தொழுகைக்கு போவது கூட எனக்கு கொரூரமாக இருக்கிறது. பிச்சை எடுக்கும் என் தாய், பிச்சை எடுக்கும் என் சகோதரிகள், அவர்களின் குழந்தைகள் முகங்களை எதிர்கொண்டுதானே பள்ளியை விட்டு வெளியில் வரவேண்டும் என்ற ஏக்கமும், வெட்கமும், கூடவே அவமானமும்தான்......... ஒன்றைக் கூற மறந்துவிட்டேன். மறுமையிலும்தான் அவர்களை எதிர் கொள்ள வேண்டும் ????????? 

"கடவுள் இறந்துவிட்டர். அவரை நாம்தான் கொண்றோம்" என  Nietzsche கூறியது உண்மைதான்.

நட்பு///!!!^^^???...


எனக்கு நட்பில் இருக்கின்ற நம்பிக்கை ஒரு போதும் நண்பர்கள் என்று கூறுபவர்களிடத்தில் இருப்பது கிடையாது. அவ்வாறு விபரிப்பவர்கள் கூட அதனை என்னிடத்தில் மெய்ப்படுத்தியதும் கிடையாது. வழமைபோன்று தற்போது கூட நண்பர்கள் என்று கூறி சிலர் என்னைக் கீறி விட்டு வெளிச் சென்றிருக்கின்றன. அவற்றில் ஒன்று இன்று வரை ஊகமாயிருந்து இன்றோடு ஊர்ஜிதமாயிருக்கின்றது. இதற்கு காரணம் நட்பின் உண்மை வடிவத்தினை நான் அறிந்திருப்பதாக கூட இருக்கலாம். சிலருக்கு பிறந்தோம் என்பதனை விட இறந்தோம் என்பதில் அதிக அக்கரை இயல்பாய் வந்து விடுகின்றது. இன்னும் சிலருக்கு இறந்தோம் என்பதனை விட ஏன் பிறந்தோம் என்பதில் கூடுதல் அக்கரை தோற்றம் பெற்று விடுகின்றது. இங்கு ஒன்று ஆரம்பத்தில் ஏற்படும் புரிதல். மற்றொன்று, இறுதியில் ஏற்படுகின்றது. நட்பிலும் இப்படித்தான் பிறப்பும் இறப்பும் உண்டு....எனக்குத் தெரியாது. இவர்கள்தான் அதனை மெய்ப்பிக்கின்றார்களே! தகுதியற்றவர்கள் பந்திகளை வாசிக்க வேண்டாம்.

'நண்பர் யார்? இரு உடல்களுக்குள் குடித்தனம் கொண்ட ஒரே பிராணம்' - அரிஸ்டோட்டல்

நட்பு என்றால் என்ன? உறவு என்பதன் மெய் அர்த்தம்தான் என்ன?  நாம் இந்த வினாவினைத்தான் நாளாந்தம் கேட்டுக் கொண்டிருக்கிறோமே தவிர, அதற்கான திருப்தியான விடையினை ஒருபோதும் கொண்டு வந்தது கிடையாது. இதற்கும் காரணம் இருக்கின்றது. உறவு என்பது வார்த்தைகளிலோ அல்லது வர்ணனைகளிலோ உள்ளடக்கிட முடியாத உணர்வுகளின் கலவை. அது ஒரு அழகான படிவம் எனலாம். உறவானது மிகவும் தாங்கொணா துயரங்களையம் தன்னகத்தே கொண்டிருப்பதனால் அதனை விபரிப்பது என்பது மிகவும் கடினமானது.



இருப்பினும், நட்பு துன்பத்தின் போதும் இன்பத்தின் போதும் நிபந்தனை ஏதுமற்று சிலாகிக்கின்ற ஒன்றாக கருதப்படலாம். ஒரு தனித்தன்மையான கவர்ச்சியுணர்வு, விசுவாசம், நேசம், மரியாதை, நம்பிக்கை, மகிழ்ச்சியின் சிகரம் முதலியனவெல்லாம் நட்பிற்கு அர்த்தமாக கூறப்படுகின்றது. இதேபோன்று, ஆசை, இருவருமொத்த மரியாதை அத்தோடு இருவருக்குமிடையில் கெட்டியான நெருக்கம் என்பனவெல்லாம் நண்பர்கள் தமக்குள் பகிர்ந்து கொள்கின்ற விடயங்களாகின்றன. இவையெல்லாம் நட்பின் பொதுவான விடயங்கள். உண்மையான நட்பினை ஒருவர் அனுபவிக்க வேண்டுமாக இருந்தால் அவர் கட்டாயம் உண்மையான நண்பர்களை வைத்திருக்க வேண்டும். அப்போது அவர்கள்தான் பொக்கிசமாகவும் இருப்பார்கள்.

என்றாலும், நாம் நட்பின் அர்த்தத்தினை கண்டுகொள்ள இவ்வளவு வார்த்தைகளை வாரி இறைப்பதற்கு தேவை கிடையாது.

"நட்பு என்பது ஒருவருடன் பத்திரமாக வைத்திருக்கும் வெளிப்படுத்த முடியாத உணர்வுகளின் சௌகரிகம் என்பதுடன் அதனை வார்த்தையாலோ அல்லது எண்ணங்களினாலோ மதிப்பிடமுடியாது" என ஜார்ச் ஈலியட் குறிப்பிடுகின்றார்.

நட்பு என்பது உணர்வுகளின் மெய்யான இருப்பிடம். அதனை நீங்கள் உங்களுடைய நண்பர்களின் முன்னால் வெளிப்படுத்தும் போது வார்த்தைகளாலோ அல்லது எண்ணங்களினாலோ அளவிட்டுவிடக் கூடாது. இது எப்போது என்றால், யாராவது உங்களைப்பற்றி உங்களைவிட அதிகமாக தெரிந்து வைத்திருப்பாராக இருந்தால் நீங்கள் அதிகமாக உணர்ச்சிவசப்படுகின்போது உங்களுடன் அவர்கறளின் பிரசன்னத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இரவு முழுக்க நீங்கள் நித்திரையுடன் போராடியிருந்தாலும், காலை எழுந்ததும் அந்த பொழுது உங்களுக்கு மிகவும் புரிதல்கள் நிறைந்ததாக அமையும். சந்தோசங்களை பகிர்ந்து கொள்வதிலும், இருவரும் ஒன்றாக இருந்து அளவளாவுவதிலும் பார்க்க நட்பு என்பது மிகவும் அப்பாற்பட்டது. அது யாராகிலும் உன்னை வந்து, உனது வாழ்க்ககையின் சிரத்தையான நிலையில் இருந்து மீட்டெடுக்கும் போது ஆரம்பிக்கின்றது. நட்பு என்பது நிலையானது.

இருதயத்தில் இருந்து எழும் மெய்யான அன்பளிப்புகள்தான் நட்பின் அடையாளமாகும். நட்பினால் எழும் பிணைப்பானது காலத்தினால் தீர்மானிக்கப்படுகின்றது. எப்படி இருவருக்கிடையில் நம்பிக்கை வளருகின்றதோ அதே அளவு நெருக்கமும் அதிகரிக்கின்றது.

ஆனாலும், வேறுபட்ட மனிதர்கள் வேறுபட்ட நிலைகளில் நட்பு என்பதனை நோக்குகின்றனர். சிலருக்கு அது அவனோஃஅவளோ உன்னை வெறுத்திட முடியாது என்கின்ற நம்பிக்கை. இன்னும் சிலருக்கு, அது நிபந்தனை ஏதுமின்றிய நேசம்ஃகாதல். இன்னும் சிலர் அங்கு இருக்கின்றார்கள். அவர்கள் நட்பு என்பதனை தோழமையாக உணருகின்றார்கள். அவரவர் எத்தகைய அனுபவத்தினை கொண்டிருக்கின்றார்களோ அந்தளவில் அவர்களுடைய நட்பிற்கான வியாக்கியானமும் அமைந்துவிடுகின்றது. நட்பு என்பதன் நோக்கமும், அதன் அர்த்தமும் எமது வாழ்வின் நிலமைகளில் ஏற்படும் கஷ்டங்களில் சிறிதளவையேனும் எமது நண்பர்களுக்கும் அளிப்பதாகும். ஆனால் அது அவர்களை வருத்துவதற்காக இருக்க கூடாது. உரோம மெய்யியலாளர் சிசரோ "நட்பு என்பது அதன் எதிரிடைகளான துயரங்களையும், உளைச்சல்களையும் பகிர்ந்து கொண்டு தம்மை மிருதுவாக்கி கொள்வதன் வாயிலாக புத்தெழில் பெறுகின்றது" எனக் கூறுகின்றார்.

என்னைப் பொறுத்தவரை, இது ஒரு இயல்பான உறவு நிலை, எமது ஞாபக நிலைகளைக் கடந்த காலத்தில் அது ஆரம்பித்திருக்க வேண்டும். நட்பினைப் பற்றி பல்வேறு கட்டுக் கதைகளும், சமயம் சார்ந்த வரலாறுகளும் உலகத்தில் நிறையவே உள்ளன. எவர் நம்பிக்கையுள்ள நண்பர்களை பெற்றுக் கொள்கின்றாரோ அவர் மதிப்பிட இயலா கருவூலமொன்றை பெற்றுக் கொண்டதாக அவைகள் கூறுகின்றன.

உளவியல் ரீதியாக நோக்குவோமானால், நட்பு என்பது இருவருக்கிடையில் காணப்படும் காலத்தினால் கட்டுண்ட உறவு நிலை எனப்படுகின்றது. சிறு குழந்தைகள் இரண்டு நட்பு கொண்டாடுவதனைப் போன்று, அவர்கள் தமது நடவடிக்கைகளுக்கு ஏற்ப தமது வரம்பெல்லைகளையும் அமைத்துக் கொள்கின்றார்கள். அவர்கள் உறவுகள் தேவை என்றிருந்த போது எவ்வாறு எல்லைகளை வகுக்க கற்றுக் கொண்டார்களோ அதே போன்று இவை அவர்கள் வாழ்வில் மிகவும் ஆரோக்கியமான நண்பர்களாக செயல்படுவதாக காட்ட உதவும். இவை அவர்களுடைய உணர்வுகளை விருத்தியடையச் செய்ய வாய்ப்பாக அமையும். எவ்வாறாயினும், ஒருவருடன் கலந்துள்ள எவ்வித உறவும் இயல்பான ஊக்கத்தினையும், விருத்தியினையும் தருவதாக அமைதல் வேண்டும். ஏனையவர்களிடம் இருந்து எத்தகைய உதவிகளும் இன்றி ஒருவர் மட்டும் எல்லா முயற்சிகளையும் செய்து தாக்குப் பிடிப்பாராக இருந்தால் நட்பு என்பது வாழாது.

நட்பானது குழந்தை ஒன்று சமூகமயப்படுகையில் ஆரம்பிக்கின்றது என்றிருப்பினும், அவன்/அவள் சரி எது? பிழை எது? என்று பிரித்தறியும் நிலை அடையும் வரையிலும் கவனமாக நடப்பது அவசியம். பிழையான நட்பும், சமூகமயப்படுதலில் இருக்கின்ற குறை நிலையும் பல்வேறு உளவியல் காரணிகளுக்கும், கோளறுகளுக்கும் வழியேற்படுத்திவிடுகின்றன. இறுதியாக அவை தவறான சமூக நெகிழ்ச்சிப்படுத்தலுக்கு இட்டுவிடும். ஒரு குழந்தையின் ஆளுமை விருத்திக்கு தகுந்த நட்பு இன்றிமையாதது. உடன்பாடானதும், எதிர்மறையானதுமான இருவகை அனுபவங்களும் தனிநபரொருவருடைய ஆளுமையினை தூய்மையாக்குகின்றன. இதனால், நீ நட்பு ஒன்றினை தேர்வு செய்யும் போது அது உனது உளவியல் நிலைக்கும், உணர்வு நிலைக்கும் ஒத்திசைவதாக இருக்க வேண்டும் என்பது அடிப்படையாகும்.

நட்பு என்பதற்கு அர்த்தம் காண்பது மிகவும் சிரத்தையான விடயம். அது என்றும் பற்றியெரிகின்ற ஒரு வினா. இருப்பினும், நாம் எமது நண்பர்கள் என்று கூறிக் கொள்பவர்களை சந்திக்கின்ற போது தானாகவே அதற்கான விடையினை மிகவும் தெளிவாக புரிய முடியும். நட்பு என்பதன் பொருள் எமது இருதயத்துள் படிந்து கிடக்கின்றன. ஏனெனில் நட்பு என்பது உணர்வுகளால் மட்டும் இயலக்கூடியது, விபரிக்க முடியாதது. எது மிகவும் அழகானதோ, அவசியமானதோ அது புலக்கண்களுக்கு அகப்படாது. ஆனால் அவை அகத்தினால் உணரப்படும்.

நட்பினை புரிந்துகொள்ள வேண்டுமா? வாருங்கள், இந்த உலகத்தை உங்களது அகத்தினால் காணுங்கள்.

நட்பினை புரிந்து கொள்வதனை விட 
வேறு அருள் கிடையாது.
எவர் தொல்லைப்பட்டு கிடக்கிறாரோ...
எவரில் நாம் தாங்கிக் கிடக்கிறோமோ...

நண்பன்- என்னை நன்றான் அறிந்தவன்.
நன்றாய் உணர்ந்தவன்.
ஆசுவாசமான நாள் அது.
அவன் - கண்டிப்பதில் மிருதுவானவன்.
அனால் அரவணைப்பு பலமாயிருக்கும்.

நட்பினைத் தவிர வேறு அருள் இருக்க முடியாது...
எங்கு அக்கரை இருக்கிறதோ,
எவர் எம்மை நேசிக்கின்றாரோ!
ஒவ்வொரு நாளும்,
ஒவ்வொரு இரவும்,
ஒவ்வொரு வணக்கத்திலும்...
இருக்குமா?

உனது தொலைந்து போன நட்பிற்கு நன்றி.

நம்பிக்கையின் கரம்


ஜுலியா அர்மாஸ், அட்லாண்டாவில் தாய்சேய் நலத் துறையில் தாதியாக பணிபுரிந்த பெண். அவள் கர்ப்பமாக இருந்த போது ஏற்பட்ட சில உபாதைகள் காரணமாக ஸ்கேன் செய்தபோது, கருவிலிருந்த குழந்தை `ஸ்பைனா பிஃபிடா (spina bifida)என்ற தண்டுவட நோயால் பாதிக் பட்டிருப்பது கண்டறியப் பட்டது. இந்த நோயின் விளைவால் குழந்தை யின் இடுப்புக்கு கீழே செயலற்று போகும் நிலை ஏற்படலாம். கருத்தரித்து 21 வாரங்களே ஆகியிருந்த நிலையில், குழந்தையை பிறக்க வைத்து அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாது. குழந்தை உயிர் பிழைக்க தாயின் கருவறைக்குள் இருந்தேயாக வேண்டும். 

இந்நிலையில், ஜார்ஜியாவில், புகழ்பெற்ற மருத்துவர் ஜோசப் புருனர் என்பவரைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரிடம் சிகிச்சைக்கு சென்றாள். சகல பரிசோதனைகளும் மேற்கொண்ட பின், அவளுக்கு அறுவைசிகிச்சை செய்வதென தீர்மானிக்கப் பட்டது. அவளது கர்ப்பப் பையின் சிறுபகுதி வெட்டியெடுக்கப் பட்டு, அதன் வழி குழந்தைக்கு அறுவைசிகிச்சை மேற் கொள்வதென முடிவு செய்யப்பட்டது. டாக்டர் புருனர் தலைமையில் ஒரு மருத்துவக் குழு அறுவைசிகிச்சை மேற்கொண்டது. குழந்தைக்கு வெற்றி கரமாக அறுவைசிகிச்சை முடிந்த நிலையில் தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. 21 வாரங்களை, வயதாக கொண்ட அந்த சின்னஞ்சிறு சிசுவின் கரம், அறுவை சிகிச்சைக்காக போடப் பட்டிருந்த துவாரத்தின் வழியாக நீண்டு, தனக்கு சிகிச்சை செய்த மருத்துவரின் கைமேல் பட்டது. அந்த அதிசயக் காட்சி படமாக்கப்பட்டது. டாக்டர் புருனர், அந்த சம்ப வத்தை விவரிக்கையில், `குழந்தையின் கை என் கையை தொட்டநொடி நான் உறைந்து போனேன். நான் மெய்சிலிர்த்து போன தருணம் அது’, என்கிறார். இந்த படத்தைப் பார்க்கையில் நாமும் மெய்சிலிர்த்து தான் போகிறோம்.





தனக்கு உயிர் கொடுத்த கையை நம்பிக்கையோடு பற்றுவதாக அர்த்தப்படுத்தி, `நம்பிக்கையின் கரம் (hand of hope)' என்ற பெயரோடு, அந்த படம் உலகெங்கும் வலம் வந்தது. சம்பவம் நிகழ்ந்தது ஆகஸ்ட் 19, 1999 ம் ஆண்டு. அதே ஆண்டு டிசம்பர் 2ம் தேதி முழு ஆரோக்கியத் துடன் ஆண்குழந்தை பிறந்தது. சாமுவல் அலெக்ஸண்டர் அர்மாஸ் என்ற அந்த சி்றுவனின் பத்தாவது வயதில் எடுக்கப் பட்ட புகைப்படம் தான், கீழே நீங்கள் காண்பது. 25 yard backstroke நீச்சல் போட்டியில் முதல் பரிசாக வென்ற பதக்கங்களுடன் சிரிக்கும் அர்மாஸிடம் அவனது முதல் புகைப்படம் ( 21 வார) பற்றிக் கேட்டால், `அந்த கைகள் என்னு டையவை என்று உணரும் போது சந்தோஷமாகவும், பெருமையாகவும்’ இருப்பதாக கூறுகிறான். 





`இட்ஸ் எ மெடிக்கல் மிரக்கில்’ என்ற வசனத்தை அடிக்கடி தமிழ்படங்
 களில் கேட்டிருப்போம். நிஜமாகவே இது தான் மெடிக்கல் மிரக்கில்!!


சுல்தானுக்கு நன்றி.