நரகல் பஸ்

ஏனோ தானோ என்று இரவு நான் விழித்துக் கொண்டதனால் விடிந்துவிட்டது. அவசரமாக நான் எப்போதும் இருப்பது அரிது. இன்றும் அப்படித்தான். எந்தவொரு கருமமானாலும் பார்த்து ஆறுதலாக செய்து அலுப்படிக்காமல் வாழ்க்கையினை இரசிக்கவும் கழிக்கவும் முயல்கின்றவன் இவன்.  நாம் எல்லோரும் விதைத்த வினையின் கருமமாய் இன்று மனிதனுக்கு அவனைத்தவிர இந்த உலகத்தில் பிரசன்னமாயிருக்கின்ற அனைத்தும் ஒன்று சோர்ந்து எதிராக பழிதீர்த்துக் கொண்டிருக்கின்ற காலம் இது. இன்றும் அதன் ஒரு அங்கம்தான் என்ற எண்ணத்துடன் நானும், சன்னல் திரையினை சற்று நீக்கிக் கொண்டு என் எதிரிகளை சற்று உற்றுப் பாhத்தேன். என் எதிர்பார்ப்பு முறியடிக்கப்படவில்லை. ஆகாய வானத்தின் முகம் ஏதொ எனக்கு கற்றுத்தர முனைவதனை புரிந்து கொண்டேன். சற்று அச்சமும் கூடவே நேரமும் ஊர்வதனால், இன்றய நாளின் அப்பாவித்தனத்தினை நினைத்துக் கொண்டு நடவடிக்கைகளை கவனிக்க செயல்பட்டவர்களில் நானும் ஒருவன். இந்தப் போர் எப்போது தொடங்கும் என்பதும் தெரியாது, எப்போது முடியும் என்றும் தெரியாது மிகவும் குழப்பமாக இருந்தது. ஆனால் போர் ஒன்று எப்போது ஆரம்பிக்கும் என்ற யுத்த தந்திரம் எனக்கு ஓரளவு தெரியும் என்பதனால் நானும் தயாராகியிருந்தேன்.

நானும் எனது தளபாடங்களை தயார் படுத்திக்கொண்டு வெளியில் வர எத்தணித்ததுதான் தாமதம் என்னை நோக்கி அம்புகள் பாயத் தொடங்கின. இந்த அம்புகள் மிகவும் விசித்திரமானது. இந்த அம்புகள் கொல்லுவதற்காகவும் பயன்படும், நாம் கொள்வதற்காகவும் பயன்படும். ஆனால் நோக்கத்திற்கு ஏற்ப அதன் வீரியம் தீர்மானிக்கப்படும் என்பது நாங்கள் யுத்த முனையில் கடந்த வருடங்களில் கண்ட அனுபவம். அவற்றின் வீரியத்தினை நாம் காலம் கடந்துதான் கண்டு கொள்கின்றோம் என்பது எமது பலயீனம். எம்மிடத்தில் இருக்கின்ற கேடயங்கள் சிலபோது அதன் வீரியத்திற்கு முறண்டு பிடிப்பதாக இருக்க கூடும்.  என்றாலும், பல வேளைகளில் அவை உதவாக்கரைகளாக மாறிவிடுகின்றன என்பது நாம் எப்போதும் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டியது அவசியம். இன்றும் அப்படித்தான் எனது கேடயம் ஓரளவுக்கு என்னை பாதுகாக்க உதவியிருந்தது. இதற்கு காரணம், எனது கேடயத்தின் பலமல்ல மாறாக எனது எதிரி என்மீது காட்டிய கருணை என்பதுதான் உண்மை. ஏனெனில், எதிரியன் பலத்தினை நான் மிகவும் சிறப்பாக அறிந்து வைத்திருக்கின்றேன், அவர்களிடம் இருக்கின்ற ஆயுதங்களின் வலிமை அத்தோடு எனது பலவீனங்களும் கூடவே எனக்குள் எவ்வேளைகளிலும் ஞாபகப்படுத்திக் கொள்ளப்படுபவைதான்.

வருகின்ற வழிகள் அனைத்தும் யுத்தக் கறைகளினால் சேறாய்க் கிடந்தன. கால்களை வைக்கின்ற போது எதோ செத்துக்கிடக்கின்ற உடல்களுக்கு மேலால் கால் வைத்து மி(ம)தித்து நடப்பது போன்று பக்குவமாக நகர வேண்டியிருந்தது. இந்த யுத்த திடலை முகம்கொடுப்பதற்கு இன்னும் நாம் முன்னேறவில்லை. நான் தரித்திருந்த கவசங்கள் என்னை மேலும் பலயீனப்படுத்தியது. பலயீனம் என்பதும், வாழ்க்கையில் நாம் அனுபவிக்கின்ற துக்க துயரங்கள் என்பதுவும் ஏற்படக்காரணமாகயிருப்பது வேறு யாருமல்ல. நாம் வேறு யாரையும் குறைகூறுவதும் நல்லதல்ல. இவையாவும் நாம் பெற்றுக் கொள்கின்ற புரிந்துணர்விலும், எமது பலயீனமான ஆளுமையிலும்தான் முற்றாக தங்கி தேங்கிக் கிடக்கிறது என்பதனை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதாவது, நாம் துன்புறுகின்றோமானால் அதற்கு காரணம் எமது புரிந்துணர்விலும், ஆளுமையிலும் ஏற்படுகின்ற குறைதான் காரணமே அன்றி வேறு ஒன்றும் கிடையாது. சற்று அவசர ஏற்பாடுகளை மேற்கொண்டு எனது கால்களுக்கு அணிந்துதிருந்த கவசத்தினை சற்று மடித்து முறித்து வைத்துக் கொண்டு புறப்பட்டேன்.

இந்த சடுதியான யுத்தத்திற்கு ஈடுகொடுப்பது விசமத்தனமானது என ஊகித்த நான் வழமைக்கு மாற்றமான ஒரு யுத்த உபாயத்தினை கையாளத் தீர்மானித்துக் கொண்டு பஸ் தரிப்பிடத்தில், தரித்திருந்த பஸ்ஸினை சற்று உற்றுப் பாhத்தேன். அப்போது அந்த பஸ் எனக்கு அழகாகாத் தோன்றிது என்பதனால் அதில் ஏறிவிட்டேன். ஒருமாதிரியாக யுத்த களத்தின் எல்லைதாண்டியதாக என்னை சுமந்த பஸ் சென்றது. அப்போது அந்த பஸ் சுமந்து வந்த அத்தனை நபர்களும் ஏதோவொரு வகையில் யுத்தத்தில் கலந்து கொண்டவர்கள் என்பதனை அவதானிக்கும் வேளை எனக்கு சற்று உள்ள10ர மகிழ்ச்சியாயிருந்தது. நல்லதோ கெட்டதோ எல்லாவற்றிலும் தேவையில்லாமல் மூக்கை நுளைத்துக் கொள்வது மனிதனிடத்தில் மட்டும் இருக்கின்ற விசேட குணமல்லவா. யுத்த நிலையில் சொட்டு இரத்தம் கூட படாது காத்த எனது கவசத்தில் அங்கிருந்த ஒருவனின் ஆயுதக் கேடயத்தில் இருந்த வேரறுத்த இரத்தம் பட்டு என்னை சஞ்சலப்படுத்தியது. சிலரது ஆயுதங்களில் இன்னும் இரத்தக்கறைகள் வழிந்து ஓடிக் கொண்டிருந்தன. இத்தனை யுத்தங்களுக்குள்ளும் ஒருத்தன் அந்த பஸ் அழகாயிருக்க காரணமான ஒருத்தியை உற்று நோக்கிக் கொண்டிருந்தான். அது ஒரு வித்தியாசமான யுத்தமாக இருந்திருக்க கூடும். இது எமது யுத்தத்தில் எவ்வளவு தூரம் பாதிப்பினை ஏற்படுத்தும் என எனக்கு தெரியது. ஆனால் உள் நாட்டு யத்தம் தொடர்கிறது.

இப்படி சென்று கொண்டிருக்கையில்தான் எதாவது எதிரியின் தாக்குதலில் அகப்படுவது யுத்த முன்னெடுப்பில் மற்றொரு கோணம் என்பதுவும் எனது அனுபவம். முன்பு ஒரு முறை இப்படிச் சென்று கொண்டிருக்கையில் சாரதியின் பக்கமாக ஒரு குண்டு மழை பொழிந்து நாங்கள் எல்லாரும் சற்று மிரண்டு போன சம்பவம் எனக்குள் மீள் உருவெடுத்தது. இதனையெல்லாம் நான் மீட்டிப்பார்க்க கூட நேரமிருக்கவில்லை. அடுத்த பஸ் தரிப்பு நிலையம் கண்டு தப்பிப் பிழைத்த எமது சக கள வீரர்களை ஏற்றிக் கொண்டு அவசர அவசமாக புறப்பட்டோம். ஆனால் திடீரென வாகனத்தில் ஏதோ சத்தம் ஒன்று பிரமாண்டமாக வெளிப்பட்டது. இதனைக் கேட்டு நாங்கள் ஒருவருக்கொருவர் முகத்தை திருப்பிப் பார்த்து சற்று சிரித்துவிட்டு அப்படியே இருந்து கொண்டோம். சிலர் அப்படியே பின்வாங்கி இடைநடுவில் இறங்கிவிட்டனர். இன்னும் சிலர் வேறு வழியில்லாமல் உட்கார்ந்து இருந்தனர்.


இவ்வுலகத்தில பலர் இப்படித்தான் ஏற்படுகின்ற சவால்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தோய்ந்து விடுகின்றனர். இவர்கள் குறைந்தளவாவது பொறுமை காத்து அடுத்து என்ன நடக்கும், அதனை நாம் முகம் கொடுக்க முடியுமா என்று கூட பரீட்சிப்பது கிடையாது. மிகவும் வேதனையான விடயம் யாதெனில் இவர்கள் தங்களை மட்டுமல்லாது இன்னும் பலரை தம்மோடு சேர்த்துக் கொண்டு சென்றுவிடுகின்றனர். அல்லாது போனால் மற்றவர்கள் இவர்களைப் பார்த்து கெட்டுவிடுகின்றனர். இவர்கள் யாவரும் அவர்களுடைய எதிர்பார்ப்புக்கள் உடனடியாக நிறைவேறிட வேண்டும் என எதிர்பாhக்கின்றனர். அவ்வாறெனில், அவர்கள் ஏன் மனிதனாக பிறக்க வேண்டும்? அவர்கள் ஏன் மனிதன் என்ற அந்தஸ்தில் வைத்து நோக்கப்பட வேண்டும்?

பஸ் வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது. நாம் பயணம் செய்வது பஸ்ஸிலா அல்லது இரயில் பெட்டி ஒன்றிலா என்று நினைக்கும் அளவுக்கு அதன் சத்தம் கடுமையாக, கொடுமையாக இருந்தது. இறங்கினால் அடுத்த நேரம் என்ன நடக்கும் என்று எமக்கு தெரியாது. ஆனால் அடுத்தடுத்து வந்த பஸ் தரிப்பிடங்களில் எவரும் நாங்கள் இருந்த பஸ்ஸில் ஏறவில்லை. அப்படி பிழையாக அந்த பஸ் வந்திருக்க முடிந்தது. ஆனால் சாரதியோ அந்த பஸ்ஸின் கோளாறினை பொருட்படுத்தவே இல்லை. வீதியில் நின்ற அனைவரும் அதனை மிகவும் உற்றுப் பாhத்துக் கொண்டிருந்தனர். துரிப்பிடத்தில் நின்வர்கள் கூட அந்த பஸ்ஸில் ஏறவில்லை. மற்ற பஸ்ஸுக்காக காத்து நின்றனர். உண்மையிலேயே குறை என்பது உள்ளிருந்து பார்ப்பவர்களுக்கு புரியாது. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கே அது மிகவும் இலகுவாக தென்படும். நாம் ஒரு காரியத்தினை புரிகின்ற வேளையில், அதில் இருக்கினற் கு(க)றைகளை எப்போதும் மறந்து விடுகின்றோம் அல்லது மறைத்துவிடுகின்றோம். ஆனால் வெளியில் இருக்கின்றவர்கள் அதனை சுட்டிக் காட்டுகின்ற வேளையில் நாம் பொருட்படுத்துவது கிடையாது. வெளியில் வீதியில் நின்று கொண்டிருந்தவர்கள் அதனை மிகவும் ஆபத்தானதாக கருதி பஸ் நடத்துனரிடம் காட்டுவதையும், சாரதியிடம் சுட்டிக் காட்டுவதனையும் நாங்கள் உள்ளிருந்து அவதானித்துக் கொண்டிருந்தோம். எனிலும், எமக்கு அப்படி எதுவும் நடக்கவில்லை போன்று சதாரணமாக அமர்ந்து கொண்டிருந்தோம். ஆனாலும், நான் ஏற்கனவே கூறிய யுத்தம் ஒன்று எதுவித கவலையும் இல்லாமல் நடந்தேறிக் கொண்டுதான் இருந்தது. நான் நினைக்கின்றேன் அந்த யுத்தத்தில் எதிரி மட்டும்தான் இருந்தான் என்று. 

ஏதோ அந்த குழறுபடியின் தன்மையினை அறிந்து மற்றய பஸ் ஒன்று அதற்கு உதவக் காத்திருந்தது. ஆனாலும் நாங்கள் அமர்ந்திருந்த பஸ் சாரதி அந்த உதவிக் கோரிக்கையினை மறுத்துவிட்டு பஸ்ஸை ஓட்டினார். நான் நினைக்கின்றேன் அந்த பஸ் சாரதியிடத்தில் ஒரு நலவான கொள்கை ஒன்று இருக்கின்றது என்று. அந்த சாரதி எமது தேவைகளை நன்றாக பரிந்து வைத்திருக்கும் ஒருவர் என்பது எனது கருத்து. நம்பி ஏறியவர்களை ஏமாற்றிவிடக் கூடாது அல்லது அலைச்சலுக்குள்ளாக்க கூடாது என்பதில் மிகவும் உன்னிப்பாக இருப்பவர் என்பது போல் தெரிந்தது.

எமக்கு ஏற்படுகின்ற அத்தனை விடயங்களும் எனக்கு கஷ்டமாக இருக்க காரணம் நாம் அவற்றை நோக்குகின்ற பார்வையில்தான் இருக்கின்றது. நாம் காண் முயலுகின்ற மாற்றம் என்பது மிகவும் விசித்திரமானது. அதாவது, நாம் எப்போதும் அவற்றை குறிப்பாக மற்றய மனிதர்களிடத்திருந்துதான் எதிர்பார்க்கின்றோம். ஆனால் அது மிகவும் துரதிஷ்டவசமானது. நாம் காண முயல்கின்ற மாற்றமானது எமது எண்ணத்தின் வெளிப்பாடாகும். எமது எண்ணம் மாத்திரமே எமது கட்டுப்பாட்டிற்கு உட்பட்டது. நாம் இந்த உலகத்தில் மாற்றம் ஒன்றினை கருத்தில் வைப்போமானால் அது எம்மிடத்திலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். ஏனெனில் எம்மிடத்தில்தான் அதற்காக எண்ணம் இருக்கிறதல்லவா.

நாம் ஒருவரிடத்தில் கோபமாக இருக்கிறோமாயின் அல்லது ஒருவர் எம்மோடு பகையாய் இருக்கின்றார் எனில் அது ஏதோவொரு தேவையின் நிமித்தமாகத்தான் என்பதனை புரிந்து கொள்ள வேண்டும். நாம் எல்லோருக்கும் உலகளாவிய ரீதியில் பொதுத் தேவைகள் இருக்கின்றன. அது அன்பாக இருக்கலாம், நேசமாக இருக்கலாம், கருணையாக இருக்கலாம், உதவியாக  இருக்கலாம், துணையாக இருக்கலாம், மதிப்பாக இருக்கலாம், மரியாதையாக இருக்கலாம், கௌரவாமக இருக்கலாம், நட்பாக இருக்கலாம், வாஞ்சையாக இருக்கலாம் அல்லது இப்படி எண்ணற்ற பொதுத் தேவைகள் எம்மத்தியில் காணப்படுகின்றன. இவற்றை நாம் புரிந்து கொள்ள முயறசிப்போமானால் எம்மிடத்தில் பிரச்சினைகள் ஏற்பட வழியிருக்காது. இதனைத்தான் நான் அந்த பஸ் சாரதியிடத்தில் அவதானித்தேன். அந்த மனிதர் அந்த பஸ்ஸில் பிரயாணித்த எமது தேவையினை அவர் புரிந்திருந்தார். எங்களுடைய உணர்வுகளுக்கு அவர் மதிப்பளித்தார். பிராயாணம் செய்கின்ற எமது தேவைகளான: நேரத்திற்கு செல்ல வேண்டும், பிரயாணத்தில் இடைஞ்சல்கள் இருக்க கூடாது, மழை பெய்து கொண்டிருப்பதனால் நாங்கள் அவதிப்படக் கூடாது என்பனவற்றை அவர் விளங்கிக் கொண்டார். இதனால் அவர் அதற்கேற்றாற்போல் தீர்மானத்தினை மேற்கொண்டு எப்படியாவது எனது பிரயாணிகளை உரிய இடத்தில் பாதுகாப்பாக சேர்த்துவிட வேண்டும் என்பதில் முனைப்புக் காட்டினார். 

இந்த சந்தர்பத்தில் அவருக்கும் பல தேவைகள் இருந்தன. என்றாலும், அவர் எமது தேவைகளை முன்னிலைப்படுத்திக் கொண்டார், அதற்கு முக்கியத்துவமளித்தார். இதனால் எமது பிரயாணத்தினை எதுவித பிரச்சிiயும் இல்லாமல் நிறைவுபடுத்திக் கொள்ள முடிந்தது. அதுவல்லாமல், அவர் தனது தேவைகளை முன்னிலை;படுத்தியிருந்தால் என்ன நேர்ந்திருக்கும் என்று நீங்கள் கற்பனை செய்து கொள்ள முடிகின்றதல்லவா. சாதாரணமாக, அவர் இந்த பஸ்ஸிலிருந்து இறங்கி வேறு பஸ்ஸில் செல்லுமாறு பணித்திருந்தால் என்ன நடந்திருக்கும். ஆகக் குறைந்தது நான் முனுமுனுத்துக் கொண்டாவது சென்றிருப்பேனல்லாவா? படிப்பினை யாதென்றால், நீங்கள் உங்களுடைய தேவைகளுக்கும் ஏனையவர்களின் தேவைகளுக்கும் இடையில் இணைப்பினை ஏற்படுத்திக் கொண்கின்ற போது பிரச்சினைகள் ஏற்படுவதனை அல்லது ஏற்படவிருக்கின்ற வன்முறைகளை ஒழித்துவிடலாம் என்பதுதான்.

இப்படி எனது எண்ணங்கள் சுழன்று கொண்டிருக்கையில் பஸ் நான்கு ஐந்து தரிப்பிடங்களை தாண்டி சென்று கொண்டிருக்கின்றது. குழறுபடியும் சற்று அதிகரித்துக் கொண்டுதான் இருந்தது. அடுத்த தரிப்பிடத்திலும் ஒருவரும் ஏற மாட்டார்கள் என்ற எனது ஊகத்திற்கு ஆப்பு வைத்தாற் போன்று ஒரு யுவதி ஒன்றையும் கவனிக்காது ஏறிவிட்டார். அத்தரிப்பிடத்தில் அனேகம் பேர் ஏற முனைந்து இறுதியில் பிரச்சினை அறிந்து ஏறவில்லை. ஆனாலும், இந்த யுவதி ஏறிக்கொண்டதும் நானே எனக்குள் சிரித்துக் கொண்டேன். ஏனெனில் அவளும் சாதாரண யுவதியாகத்தான் இருந்தாள். அந்த பஸ்ஸில் ஏற்பட்டிருந்த சத்தம் அவளுக்கு எந்தவொரு முன்னெச்சரிக்கையினையும் தெரிவித்திருக்கவில்லையா என்பதுதான் இங்கு எனக்கு எழுந்த வினா? பெண்கள் ஒரு கருமம் தொடர்பாக எளிதில் தீர்மானம் மேற்கொண்டு விடுகின்றனர். இதுதான் அவர்கள் வாழ்வில் இடம்பெறுகின்ற மிகப் பெரிய தவறு. நாலுபோர் ஒரு காரியத்தினை செய்கின்றார்கள் என்பதற்காக நாமும் அதனை புரிவோம் பிழையில்லை அல்லது பிழையிருக்காது என முடிவெடுப்பது தவறுதானே? 

இன்றய நவீன யுவதிகள் அவசரப்படுவதில் வல்லவர்கள். ஏதோ இந்த அவசர வாழ்க்கை அவர்களுக்கு மட்டும்தான் என்று நினைத்துக் கொண்டார்களா என்பது எனக்கு தெரியவில்லை. அது ஒரு வாழ்த்தும் விடயமாக இருந்தாலும் சரி, அவர்களுடைய வாழ்க்கை பிரச்சினையாக இருந்தாலும் சரி அவசரப்பட்டுவிடுகின்றனர். அவர்களுக்கு சிந்திக்கும் ஆற்றல் அதிகம் இருப்பினும் அவற்றை ஒரு முகப்படுத்த அவர்கள் தவறிவிடுகின்றனர். இதனால், அவர்களுடைய ஆற்றல் கேள்விக்குட்படுத்தப்படுகின்றது. பொதுவாக காலம் கடந்த ஞானம் இவர்களுக்கு அதிகம். எந்தவொரு விடயமாக இருந்தாலும் நாங்கள் பெண்கள் அல்லது யுவதிகள் என்று தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொள்ளத் தெரிந்த இவர்களுக்கு அத்தனித்துவத்தினை எதிலும் உறுதியாக பற்றிக் கொள்ள முடிவது கிடையாது. தீர்மானங்களை எடுப்பதற்கு அதிகமாக காலத்ததை வீணடிக்கின்ற இவர்கள், காலத்தின் மதிப்பிற்கு ஏற்ப அவர்களின் தீர்மானத்தின் எடையை கனதியாக வைத்திருப்பது கிடையாது. எப்போதும் குறைவாகவே இருக்கும். இதனால்தான் 'பெண்ணை நம்பாதே' என்று அனுபவப்பட்டவன் கூறினானோ தெரியாது. ஏனெனில், அவர்கள் நேற்று ஒன்று, இன்று ஒன்று, நாளை ஒன்று, நாளை மறு நாள் ஒன்று கூறுபவர்கள் என்று அவன் முடிவு செய்திருக்கின்றான் போலும். பொதுவாக அவர்கள் தமது வாழ்க்கை வட்டத்தினை மிகவும் குறுகியதாக வைத்திருப்பதுவும் இதற்கு காரணமாக இருக்கலாம், எனக்குத் தெரியாது.

நீங்கள் எப்போதும் சுயநலவாதிகள் என்று சிலர் கூறுகின்றார்கள். நான் அதனை குறைகூறுதற்கு பதிலாக வேறு கண்ணோட்டத்தில் நோக்குகின்றேன். அதாவது, நீங்கள் எப்போதும் உங்களுடைய தேவைகளை மாத்திரம் முன்னலைப்படுத்திக் கொள்கின்றீர்கள். அதனால்தான் உங்களால் அதிகம் பிரச்சினைகள் ஏற்படுவதாக எல்லோரும நச்சரிக்கின்றனர். முன்பு நான் கூறியது போன்று, உங்களுக்கு இருக்கின்ற அதே தேவைகள் போன்றுதான் ஏனையவர்களுக்கு தேவைகள் இருக்கின்றன என்பதனை நீங்கள் உனரங்கள். அவை எம் யாவருக்கும் பொதுவானவை என்பதனை முக்கியப்படுத்துங்கள். உங்களுடைய தேவைகளை ஏனையவர்களின் தேவைகளுடன் பொருத்திப்பாருங்கள், மாற்றம் என்பது தன்னிலிருந்து வரவேண்டும் என்பதனை நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள். அப்போது நீங்கள் மதிப்புக்குரியவர்களாக திகழ்வீர்கள்.

ஏதோ எதியரியின் புண்ணியத்தில் சேருமிடம் வந்து சேர்ந்தது மனதுக்கு நிறைவாயிருந்தது.

நான் ஒரு மிருகம்

இப்படி எவர்கள் கூறுகின்றார்களோ அவர்கள்தான் உண்மையான தன்னையுணர்ந்த  மனிதர்கள். காரணம் இருக்கின்றது. இந்த உலகில் எவற்றுக்குத்தான், இன்னும் எவருக்குத்தான் காரணம் கிடையாது. எதையெடுத்தாலும் காரணம் கூறுவது மனிதனாய்ப் பிறந்துவிட்டால் கூடவே வருவதுதானே. காரணம் கூறுவது வேறு...காரணம் கற்பிப்பது வேறு. இதையெல்லாம் புரிந்து கொண்டால்தான் இந்த உலகில் எப்படியாவது வாழ முடிகிறது.

எனக்குப் புரியாத ஒன்றுதான் எம்மை நாம் ஏன் மனிதர்கள் என்று கூறுகின்றோம் அல்லது புகழ்ந்து கொள்கின்றோம் என்று. சிலர் கூறுகின்றார்கள் நாம் யாவரும் எனைய விலங்குகளிடமிருந்து வேறுபட்ட ஒரு சாதி இனம் என்று. சில வேளை அதனை என்னால் நம்பமுடிகின்றது. ஆனாலும், பல சமயங்களில் எனக்குள் பல கேள்விக் கணைகள் பாய்ந்து வந்து சிதிலம் சிதிலமாக கூறுபோட்டுவிடுகின்றன. மனிதன் என்ற சொல்லுக்கு எதிர்க் கருத்தாக நாம் மிருகம் என்றுதானே பயன்படுத்துகிறோம். ஆக, எம்மிடம் அப்படி என்ன விசேட குணம் இருந்துவிட்டது என்றெல்லாம் கற்பனை பண்ணியதும் உண்டு. சிலவேளைகளில் நாம் மிருகத்தினைவிட மோசமாகவெல்லாம் நடந்துகொள்ளுவதும் உண்டல்லவா. அதாவது, மனிதனிடத்தில் மிருகத்தைவிட மோசமான கெட்ட பழக்கங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அதற்காக நான் மிருகங்களிடம் கெட்ட பழக்கங்கள் இருக்கின்றன என்று கூறவில்லை. அப்படிக்கூறுவது எனது நீதியில் நியாமுமல்ல, முறையுமல்ல. இந்த அளவு கோலை இங்கு நான் விளக்க காரணம் நீங்கள் இவ்வாறான குணநலன்களை கொண்டுதான் எமக்குள் பிரிவுகளையும், வேற்றுமைகளையும் ஏற்படுத்தி எம்மை பிளவுபடுத்திக் கொள்கின்றீர்கள் என்பதற்காகத்தான். அவற்றிடம் நல்ல குணாதிசயங்கள் இல்லாததன் காரணமாக அவை மிருகங்கள் என்று அழைக்கப்படுவதாகவும், எம்மிடம் அவற்றைவிட மேலான குணாதிசயங்கள் இருப்பதனால் மனிதர்கள் என அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது. ஆல்லது அவை மிருகங்கள் என்பதனால் அவற்றிடம் மோசமான பண்புகள் இருக்கின்றன என்றும் நாம் மனிதர்கள் என்பதனால் பல சிறப்புக்கள் இருக்கின்றன என்றும் நாம்தான் கற்பனை செய்து கொள்கின்றோம். இதன் உள்நோக்கம் என்னவென்று எனக்கு புரியவில்லை.

ஒருவேளை, தன்னிடம் கேவலமான குணங்களை தாங்கிநிற்கும் மனிதன் மிருகங்களை தம்மைவிட்டும் ஒதுக்கிவிடுவதற்காக செய்த சூழ்ச்சியாகவோ அல்லது தன்னை மேலான ஜென்மங்களாக மார்தட்டி பேசுவதற்கு வாய்ப்பாகவோ இதனை மேற்கொண்டிருக்க அதிக வாயப்பிருக்கின்றது. இவ்வாறு வேற்றுமை காண்பது எமக்கு புதியவிடயமல்ல. இருப்பினும் மனிதன் என்பவன் இலபமில்லாது எதனையம் செய்வும்மாட்டான், கூறவும்மாட்டான்.

இந்த உலகில் வாழ்கின்ற அனைத்து ஜீவன்களுக்கும் தேவைகள் இருக்கின்றன என்பது உண்மைதான். அதற்காக நாம் அவை யாவுக்கும் ஒரே மாதிரியான தேவைகள் இருக்க வேண்டும் எனக் கூறமுடியாது. ஆவற்றின் தேவைகளுக்கு ஏற்ப அவைகளின் வாழ்க்கை வட்டம் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கின்றது. எனவே, நாம் காண்கின்ற இந்த முன்னேற்றங்கள் என்பது தேவைகளை அதிகரித்துக் கொண்டு அதனை பூர்த்தி செய்து கொள்வதிலா அல்லது தேவைகளை அளவோடு நிறுத்திக்கொண்டு அவற்றை சுவைத்து அனுபவிப்பதிலா என்பது நாம் சிந்திக்க வேண்டியிருக்கின்றது. எமது வாழ்வை ஆசைகளால் நிரப்பிக்கொண்டு காணும் இன்பத்தினைவிட  எமக்கு துளிர்விடுகின்ற ஆசைகளை வாழும் வாழ்க்கையினால் எழிலுறச்செய்வது எப்டியானதொரு இன்பமாக இருக்கும் என்பதனை சற்று கற்பனை செய்து பாருங்கள். எனவே, எல்லாவற்றிலும் ஆசை வைத்துக்கொண்டு அவற்றை நிறைவு செய்ய முடியாது அவதியுறுகின்ற நாம் எந்தவிதத்தில் மிருகங்களைவிட உயர்ந்தவர்கள். ஆனாலும் நாம் அதிலிருந்து எம்மை வெளிப்படுத்திக்கொள் இட்டுக் கொண்ட பெயர்தான் 'முன்னேற்றம்' என்பது.

உங்கள் மத்தியில் நான் ஒரு மிருகம் எனபதற்காக இப்படியான பல்வேறு விடயங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால், நீங்களோ உயர்ந்தவர்கள், அவற்றில் பலவற்றை நீங்களே சிந்தித்து உணர்ந்து கொள்ள முடியும் என்று நினைக்கின்றேன். அவ்வாறில்லையானால் நீங்கள் உண்மையில் மனிதர்களே அல்ல. இருப்பினும் நீங்கள் உங்களை மிருகம் என்றோ கூறமுடியாது.

சில தினங்களுக்கு முன்பு இந்தியத் தொலைக்காட்சி அலைவரிசையில்; நிகழ்ச்சி ஒன்றினை இரசித்துக் கொண்டிருந்தேன். அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் அங்கு எதிரில் இருந்த நபரிடம் 'நீங்கள் இந்த உலகில் மன்னிப்புக் கேட்பதாக இருந்தால் யாரிடம் கேட்பீர்கள்?'என்று ஒரு வினாவினை கேட்டார். கேட்டதுதான் தாமதம், எனக்குள் இராசாண மாற்றம் நடந்தேறியதனால் எனது மனம் அந்த வினாவினை என்னை நோக்கி திரும்பக் கேட்டது. மனம் என்னை அறியாமலேயே மன்னிப்பினை நான் கேட்பதற்கு உரித்தான அந்த முக்கிய நபரொன்றினை தேடிக்கொண்டு சென்றது. ஒரு சில கனப்பொழுதுகளுக்கு இது நீடித்ததனால் மிகவும் துயர்வுடன் எனது மூளையின் ஏனைய பக்கங்கள் கெடுபிடியாக செயல்பட்டு நிகழ்வுகளை கனதியுடன் அள்ளி வைத்தன. பல பக்கங்களுள் ஒரு பக்கத்தை புரட்டிய போது ஏதோ செய்தியினை எனது கண்கள் கூற முனைந்து, இறுதியில் அதுவே நான் மன்னிப்பு கேட்டக வேண்டிய நபரை எனக்கு தெரிவித்தது.

அந்தப் பக்கம் எனது பாடசலையின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தினை குறித்துத்தான். எனது வகுப்பில் நான் சண்டையிட்டுக் கொண்டு ஒருத்தனுடன் சில காலம் பேசாமல் இருந்தேன். அவன் பலதடவை என்னுடன் பேச முனைந்தும் நான் அதற்கு ஒத்துளைக்காமல் இருந்ததனால் அது பல நாட்களுக்கு நீடித்துக் கொண்டு சென்றது. ஒரு நாள் வகுப்பில் ஆசிரியர் பாடம் எடுத்துக் கொண்டிருக்கையில் அவனைப் பார்த்து கணிதத்தில் கணக்கை போடச் சொன்னார். அவனால் அந்தக் கணக்கிற்கு விடைகாண முடியாது தோற்றுப் போய் நின்ற கனம் அது. அடுத்ததாக யார் என்று நாங்கள் எல்லோரும் எதிர்பார்த்துக் காத்திருந்த போது அது நானாகத்தான் இருந்தேன். நான் அந்த கணக்கை போட்டு முடித்தேன். அப்போது அந்த ஆசிரியர் என்னை அவனுக்கு மண்டையில் ஒரு குட்டுப் போடக் கூறினார். கூறியதுதான் தாமதம்.... ஏனக்குள் எங்கிருந்து சக்தி கிடைத்தது என்று தெரியாது....அத்தனை நாளும் அவன்மீது எனக்கிருந்த பகையினை அள்ளி எனது கைக்குள் இறுக முடிந்துகொண்டு அவனிடம் சென்றேன்....என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு ஒங்கி அவனுடைய மண்டையில் பலமாக குட்டினேன். அவனுக்கு குட்டியவேளையில் எனது கைக்குள் இருந்த நரம்புகள் எப்படி வலித்தன என்பது இன்னும் எனது நரம்புகளுக்குத் தெரியும். இந்த சம்பவத்தினை நான் புரட்டிப் பாhக்கிற வேளையில்.... இன்னும் எனது கை வலிக்கிறது. நான் அவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். நண்பா என்னை மன்னித்து விடு. நான் ஒரு மிருகம்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு மிருகம் இருக்கின்றது. எனக்குள் இருக்கும் மிருகமே படிப்படியாக செத்துப் போ... எனக்குள் இருக்கும் மனிதமே மெல்ல மெல்ல வெளியே வா....உனக்காகத்தான் நான் காத்துக் கிடக்கின்றேன்.

நீ புன்னகையால் வடிந்த போது...
நானும் நகைத்திருக்க வேண்டும்...
உன் புன்சிரிப்பால் தூவமிட்ட போது...
நானும் சிரிப்பால் அலங்கரித்திருக்க வேண்டும்...
உன் அழுகுரல் என்னை ஆர்ப்பரித்த போது...
நான் உன் கண்ணீரைத் துடைத்திருக்க வேண்டும்...
நீ மௌனம் சாத்தித்த கனங்களில்...
நான் உன்னை நலம் விசாரித்திருக்க வேண்டும்...
நீ பேசிய வார்த்தைகளை...
நான் செவிமடுத்திருக்க வேண்டும்...
நீ ஏன் என்று கேட்டால்...
நான் பதிலளித்திருக்க வேண்டும்....
நீ என்னை விட்டும் அகல முற்பட்டால்...
நான் பிரிந்திருக்க கூடாது...
உன்னுடைய அலறல் கேட்டதும்...
நான் உன்னை நோக்கி விரைந்திருக்க வேண்டும்...
உன்னுடைய உடல் நிலத்தில் கிடத்த கண்டிருந்த போது...
என் கண்கள் நம்பிக்கையிழந்து மன்னிக்க முடியா அந்தரத்தில்...
நான் செய்திருக்க வேண்டின எல்லாம்...
எனது மனத்துள் வந்து உறைந்து கொண்டன...

அழகும் ஆபத்தும்

நீங்கள் நினைக்கலாம் இன்று மிகவும் அழகான தலைப்பாக இருக்கின்றதே என்று. உண்மைதான், காரணம் இல்லாமல் எதுவும் நடக்காது. தத்துவார்த்தமாக கூறினால், காரணமில்லாமல் காரியம் இடம்பெறாது. நிகழ்வொன்று இடம்பெற காரணம் இருந்தே தீரும். இதனைத்தான் எமது மதிப்புக்குரிய முன்னோர்கள் 'சோழியண்ட குடும்பி சும்மா ஆடாதுடா' என்று கூறினார்கள் என்று நினைக்கின்றேன். உங்களுக்கு வேறு காரணங்களும் தெரிந்திருக்கலாம். இன்றும் சிலர் என்னடா வழமை போன்று சம்பந்தமில்லாத இரண்டுக்கிடையில் முடிச்சுப்போட்டுக் கொண்டு வழமையான பல்லவிதான் இன்றைக்கும் என்று நினைத்துக் கொண்டால் அது உங்களுடைய கணக்கு. அழகாய்த்தான் இருக்கும்.

நீங்கள் கேட்கலாம் அது எப்படி அழகு ஆபத்தாக முடியும்? என்று. முதலில் அது ஆபத்தா இல்லையா என்பதனை நாம் தீர்மானிக்க வேண்டுமானால், அழகு என்றால் என்ன என்பதனை நாம் சரிவரப் புரிந்து கொள்ள வேண்டுமல்வா. இங்குதான் இந்த நச்சரிப்பு ஆரம்பிக்கின்றது என்று வைத்துக் கொள்ளுங்கள். பல்வேறு சந்தேர்ப்பங்களில் நாம் இது அழகான ஒன்று அல்லது அது அழகாக இருக்கின்றது என்று பலதையும் பார்த்து கூறியிருக்கின்றோம். ஆனாலும், நாம் அப்படி அழகென்றால் என்ன என்று சிந்தித்தது மிக மிக குறைவுதான். நானும் பலரிடம் அழகென்றால் என்ன என்று கேட்டிருக்கின்றேன். ஆனால் அவர்களிடம் இருந்து பதில் தருவதற்கு எந்தவொரு தகவலும் இருந்தது கிடையாது. சிலர் அழகென்றால் அழகுதான் என்று வழுகிவிடுகின்றனர். இன்னும் சிலர் அது வர்ணிக்க முடியாதது என்று கூறிக்கொண்டு அவர்களை விட்டும் அழகென்பதனை தூரமாக்கி விடுகின்றனர்.

ஆப்படியென்றால் அழகென்றால் என்ன? உங்களுக்குத் தெரியுமா? என்னைப் பொறுத்தவரையில் அழகென்பது ஒன்றுமில்லாதது. வெறும் போலியான ஒன்று. இப்படியும் சிலர் அவசரப்பட்டு கூறுவதுண்டு. ஆனால் என்னுடைய கூற்று இந்த கருத்தேற்பில் அல்ல. மாறாக , அழகென்பது 'எமது புறக்கண் காண்பதனை அகக் கண் ஏற்றுக்கொள்வதாகும்' என நான் இங்கு மிக எளிமையாக உங்களுக்குத் தருகின்றேன். அகக் கண் என்பது எமது உள்ளத்தினை அல்லது நாம் மனம் என்று கருதுகின்றோமே அதனை குறிப்பிடுகின்றது. புறக் கண் என்பது வேறு ஒன்றுமில்லை எமது இரு கண்களும்தான். ஆனால் கண்களிரண்டும் மட்டும்தான் என்று என்னால் உறுதியாக கூறமுடியாது. அங்கு மேலும், பல புறச் செயற்பாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், அவற்றினை உணர்ந்து கொள்ளும் ஆற்றலோ அல்லது அறிவோ எமக்கு மிகவும் அரிது. ஊணர்ந்து கொண்டாலும் அவை பெரும்பாலும் சரியான கணக்காக இருப்பது ஐயம்தான்.

அழகென்பது எமது மனத்தினால் ஏற்றுக் கொள்ளபடுவன. அது மற்றவர்களுக்கு அழகற்ற ஒன்றாகவும், அருவருப்பானதாகவும் இருக்கலாம். ஆனால் அந்த மனத்திற்கு அது அழகெனத் தோன்றும். அவதானித்துப் பாருங்கள், நீங்கள் உண்கின்ற உணவைத்தான் இந்த உலகத்தில் வாழ்கின்ற எல்லோரும் உண்ண வேண்டும் என்கின்ற எந்தவொரு நிபந்தனையும் யாருக்கும் கிடையாது. நான் படிக்கின்ற புத்தகத்தினைத்தான் நீங்களும் படிக்க வேண்டும் என்கின்ற நிர்ப்பந்தமும் இல்லை. இன்னும் கூறப்போனால், இந்த உலகத்தில் உங்களுக்கு ஒரு பொருள் பிடிக்காததன் காரணமாக அது இந்த உலகத்திற்கு அந்நியமான ஒன்றாக மாறியதும் கிடையாது. அதனை நாடும் மற்றும் பலர் இருக்கத்தான் செய்கின்றனர். நீங்கள் ஜவுளிக் கடையில் பிடிக்காமல் ஒதுக்கிவிட்ட சட்டையினை  அந்த கடை முதலாளி தூக்கி குப்பைத் தொட்டியில் போட்டதுண்டா? இதுதான் அழகென்பது.

ஆனாலும், அதன் மறுபக்கமும் இருக்கின்றது. ஆழகென்பது ஆபத்தாகும் சந்தர்ப்பமாக கூட அது இருக்கலாம். போட்டித் தன்மையுடையதான அதன் தன்மைதான் வேறென்ன. எனக்கும் உங்களுக்கும் ஒரு பொருளைத்தான் பிடித்திருக்கின்றது என்று வைத்துக் கொள்வோம், யார் அதனைப் பெற்றுக் கொள்வது என்ற போட்டி ஆரம்பிக்குமிடமாக அது தோன்றிவிடுகின்றதல்லவா? சற்று சிந்தித்துப் பாருங்கள். ஒழுக்கவியலில் இதனை வேறு முகத்தோற்றத்தில் நாம் அவதானிக்கலாம். அழகை இரசிப்பதென்பதில் தவறொன்றும் கிடையாது. ஆனால் தீண்டுவதும் நாசப்படுத்துவதும்தான் நாம் அழகிற்கு செய்யும் படுபாதக செயல் எனலாம். அழகில் போட்டித் தன்மை அதிகரித்தால் அது அசிங்கமாகிவிடுகின்றது. ஊதாரணத்திற்கு, பெண்ணொருத்தியிருக்கின்றாள். ஆவள் மிகவும் அழகானவள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவளை ஒருத்தன் நாடுகின்றான் என்றால் அது தவறல்ல. அதனை ஏதோவொரு வழியில் ஒழுக்கவியல் மதிப்பளித்து ஏற்றுக் கொள்கின்றது. ஆனால் அவள் ஒருத்தியினை பலர் அணுக முற்பட்டாலோ அல்லது அது நடந்தேறினாலோ நாம் அவளை விபச்சாரி என்று தூற்றிவிடுகின்றோமல்லவா? 

இதேவேளை, இந்த அழகிற்குள் சுவாரஸ்யங்களும் இருக்கத்தான் செய்கின்றன. நாம் யாவருக்கும் இந்த உலகத்தில் அழகுணர்ச்சியென்பது வேறுவேறாகத்தானே இருக்கின்றன. எனக்கு பிடிக்கின்ற ஒன்று உங்களுக்கு பிடிப்பது கிடையாது. உங்களுடைய நண்பருக்கு பிடித்த ஒன்று எனக்கு பிடித்திருக்கும். இப்படி அது ஒரு பன்முகப் பாங்கில் எம் மனங்களுக்குள் ஊடறுத்துச் சென்றுள்ளன. இதனைத்தான் கடவுளின் திட்டமிடல் என்கின்றோம். அவ்வாறில்லாது போனால் இந்த உலகத்தில் எம்மால் சரிவர இயங்க முடியாது. யுதார்த்தத்தில் இந்த அழகிற்கு சக்தியுண்டு. நாம் அதனை எவ்வாறு பயன்படுத்திக் கொள்கின்Nறூம் என்பதில்தான் நாம் கோட்டை விட்டு விடுகின்றோம். அதாவது, சில வேளை எம்மை அழகு ஏமாற்றிவிடுவதும் உண்டு. இன்னும் சிலவேளை எமது நடத்தைகளினால் அழகு பாதிக்கப்படுவதுமுண்டு. காரணம் இந்த அழகிற்கும் இடையில் புரிந்துணர்வும் சமாதானமும் ஏற்படுத்துவதில் எமக்கு பலத்த சிக்கல்கள் ஏற்படுவதனாலாகும்.

பாருங்கள் சிலவேளை நேற்று வாங்கி வந்த ஆடையினைக் கூட இன்று எம்மால் இரசிக்க முடிவது கிடையாது. சிலர் இருக்கின்றார்கள் கடைக்குச் சென்று வாங்கி வந்த பொருனை வீடு வந்ததும் பார்த்துவிட்டு மீண்டும் கடைக்குச் சென்று மாற்றி வருவார்கள். இவை நம்முள் புதைந்துகிடக்கின்ற அழகுணர்வின் குறைபாடுகள் என்பதற்கப்பால் நாம் அழகென்பதனை சரிவர புரிந்து கொள்ளவில்லை என கருதிக்கொள்வது சிறந்த முடிவாக அiயும். எம்மால் அழகென்பதனை சரிவர புரிந்து கொள்ள முடியுமாக இருந்திருந்தால் நாம் எம்மை குழப்பிக் கொள்ளாதிருக்க முடியுமல்லவா.

வேறு சிலர் அழகை பிறருக்கு தாரை வார்த்து கொடுத்து விட்டு வெறுங் கையுடன்தான் அலைகின்றனர். இதனை அவர்கள் புரிந்து கொள்வதும் கிடையாது. உதாரணமாக, ஆடை ஒன்றினை தேர்ந்தெடுக்கும் போது அந்த ஆடை அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றீர்களல்லவா? அது யாரிடமிருந்து நீங்கள் கணித்துக் கொள்கின்றீர்கள்? உங்கள் புறத்திலிருந்தா அல்லது வேறு எங்குமிருந்தா? சிந்தியுங்கள். நீஙகள் எப்போதாவது உங்களுக்கு அழகென்று பட்டதனால் அல்லது இதனை அணிந்தால் நான் அழகாக இருப்பேன் எனக் கருதி அந்த ஆடையினை நீங்கள் வாங்கினீர்கள் என்று கூறும் வகையில் எத்தனை ஆடைகளை நீங்கள் வைத்திருக்கின்றீர்கள்? சற்று கணக்கிட்டுக் கொள்ளுங்கள். மாறாக, இதனை அணிந்தால் அழகாக இருக்கும் என்று நீங்கள் கருதி வாங்கிய ஆடைகளையும் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். பொதுவாக மற்றவர்களுக்கு நாம் அழகாக தோன்ற வேண்டும் என கருதி வாங்கிய ஆடைகளை விட எனக்கு இந்த ஆடை அழகாக இருக்கும் எனக் கருதி வாங்கியன மிகமிகக் குறைவுதான். 

எம்முள் பெரும்பாலனவர்கள் மற்றவர்கள் எம்மை அழகானவர் அல்லது அழகானவள் என்று கூறவேண்டும் என்றுதான் எதிபார்த்திருக்கின்றோமே அன்றி நமக்கு நாமே அழகாக இருக்கின்றோம் என்று திருப்பதிப்பட்டுக்கொள்ள தயாரில்லை. எனக்கு இது பிடித்திருக்கின்றது என்பதனால் இதனை நான் அணிந்திருக்கின்றேன் என்று யாரும் கூறத் தயாரில்லை. ஏனென்றால் அவர்களைப் பொறுத்தவரை அழகென்பது மற்றவர்களால் தீர்மானிக்கப்பட வேண்டும் என அல்லது அதனை அவர்களைவிட்டும் தூரமாக இருக்கின்ற அறியாப் பொருளாக பொருள்படுத்திக் கொள்கின்றார்கள் என்றால் அது மிகையான கூற்றல்ல. இப்படியொன்றும் அழகு புறத்தால் நசுங்கிப் போன ஒன்றல்ல. இப்படிப்பட்டவர்கள் அவர்களின் அழகு மற்றவர்களினால் அங்கீகரிக்கப்பட பிரயத்தனம் செய்து கொண்டே இருப்பார்கள். இதனை நீங்கள் பெண்ணாக இருந்தால் அதிகம் விளங்கிக் கொள்ள முயற்சிக்கலாம். ஆனால், எவர்கள் தன்னைப் பற்றி பெருமைப் பட்டுக் கொள்கின்றார்களோ அவர்கள் மற்றவர்களிடம் அங்கீகாரத்திற்காக எதிர்பார்க்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் அழகாய்த்தானே இருக்கின்றார்கள்.  

இங்கு நீங்கள் அழகை இரசிப்பதோ அல்லது அதனைப் பாராட்டுவதோ தவறல்ல. அது உண்மையில் அழகாக இருந்தால் இரசிப்பதுவும் பாராட்டுவதும் இயல்பான ஒன்றுதான். ஆனால் அத்தகைய பாராட்டினையும் இரசிப்புதன்மையினையும் எதிர்பார்ப்பதுதான் தவறானது. ஏனெனில் அத்தருணத்தில் போட்டித்தன்மை அதிகமாகிவிடும். போட்டித்தனமை அதிகமாகிவிட்டால் அசிங்கத்தின் மொத்த உருவம் வெளிப்பட்டுவிடும். இதுதான் உண்மையில் அழகினால் ஏற்படுகின்ற ஆபத்து. இவைதான் இந்த உலகம். இதனால் அழகினால் ஏற்படுதெல்லாம் தீமைதான் என்று நான் கூறவில்லை. மாறாக, அவற்றை நாம் முறையாக கையளாவிட்டால் ஆபத்து காத்துக் கிடக்கின்றது என்பதுதான் எனது நியாயம்.

இப்படியெல்லாம் இன்று பேசவைத்தது ஒரு அழகுதான். இது நன்மையான விடயம் ஒன்றுதானே! 

நேற்று போகும் வழியில் காகில்ஸ் பூட் சிட்டி ஒன்றிற்குள் நுளைய முற்பட்டேன்;. அப்போது இரு அழகுகள் வந்த வேலையினை கவனிக்காமல் இடைக்கிடையே ஏதோ ஒன்றை அவதானிப்பது போல் எனக்கு தோன்றியது. திரும்பிப் பாhத்த வேளை அங்கு மற்றொரு மூலையில் ஒரு இளம் அழகு அதன் தாய் அழகுடன் நின்று பொருட்களை எடுத்து கூடையில் போட்டுக் கொண்டிருந்தது. இளம் அழகு மிகவும் துடிப்பாக செயற்படும் என்றதனால் தாய் அழகு கூடையோடு நின்று கொண்டிருந்தது. இதற்கிடையில், காசாளரிடத்தில் நின்று கொண்டிருந்த இன்னும் இரு பாழ்படுத்தும் அழகுகள் இளம் அழகினை மிகவும் உன்னிப்பாக கண்காணித்துக் கொண்டிருந்தன. இந்தக் காட்சியினைத்தான் வந்த வேலையினை கவனிக்காத இரு அழகுகளும் அவதானித்துக் கொண்டிருந்தன. இதனை அவதானிக்காத இளம் அளகு பாழ்படுத்தும் அழகுகளை அவதானித்திருந்ததோ என்னவோ தெரியாது சற்று சுறுசுறுப்பாக பொருட்களை எடுத்து போட்டுக் கொண்டிருந்தது. 

இத்தனையையும் அவதானித்து விட்டுத்தான் நான் உள்ளே நுளைந்தேன். என்ன இப்பொழுதுதான் நுளைகிறாயா? அப்படியென்றால் இவ்வளவு நேரமும் கூறியது? எப்போதும் களநிலவரங்களை அறிந்து செல்வதுதானே பாதுகாப்பு. இதுக்கான்றும் குறைச்சல் கிடையாது என்று முனுமுனுப்பது எனக்கு கேட்கின்றது. இந்த அழகு சென்றதும்....ஒன்றும் நடக்கவேயில்லை. எனக்குத் தெரியும்தானே நான் அழகாய்த்தான் இருக்கின்றேன் என்று, பிறகென்ன. இப்பொழுது எங்கோ நான் படித்திருந்த குறிப்பொன்று எனக்கு நினைவுக்கு வருகின்றது. அது அழகுக்குறிப்பா இல்லை அழகைப்பற்றிய குறிப்பா அல்லது அழகான குறிப்பா என எனக்குத் தெரியும். உங்களுக்கு புரிகின்றதா?

 "Beauty is to see but not to touch"
"அழகென்பது இரசனைக்கு விருந்தாவது, தீண்டுவதற்கல்ல"

அந்த இளம் அழகிற்கு....
எல்லாம் அழகு

இந்த உலகம் அழகு நிறைந்தது,
முழுக்க அழகுதான்,
அதில் யாவும் அழகுதான்,
உறுதி எதுவோ அது அழகுதான்,
எவை மிகவும் அழகானதோ,
இந்த உலகத்தில் அவையெல்லாம் அழகுதான்,
உனது அழகினால்,
மற்றவர்களும் அழகாகிறார்கள்,
மடையனாகிறார்கள்,
எவை மிகவும் அழகானதோ,
இந்த உலகத்தில் அத்தனையும் அழகுதான்.
உன்னைப் போன்று ஒரு அழகைக் காண,
எல்லோரும் முயற்சிக்கின்றார்கள்,
தோற்றுப் போகின்றார்கள்,
காரணம், இந்த உலகத்தின் பெருமைதான்.

அழகு உன்னில் இருக்கிறது,
அழகு எல்லாவற்றிலும் இருக்கிறது,
அழகு வானத்தில் இருக்கிறது,
அழகு நீலக் கடலில் இருக்கிறது,

மரங்கள் பனியினால் முக்காடிட்டு கிடக்கையில்,
அழகு தென்றலில் இருக்கிறது,
அழகு சிறியதிலும் இருக்கிறது, பெரியதிலும் இருக்கிறது,
அழகு எல்லாவற்றிலும் இருக்கிறது,
கறுப்பும் வெள்ளையும்
அழகு...