மண்ணோடு மண்ணாய் என்னை
தூற்றியெறிகின்ற போதும்...
சந்திரன் வருகை மாயமாகிறது...
காரிருளில் என்முகத்தை குறிபாக்கின்றது...
நான் கைதியாய் கிடக்கிறேன் - ஆனால்
நான் தனிமையில் இருப்பதனால்...
யாருக்கும் தெரியாது...
நடுங்கும் அச்சத்தினால் ஆரம்பிக்கின்றது...
நான் கண்ணீர் மழை பொழிகிறதனால்...
இதயத்தின் துடிப்பு சடுதியாகிறது...
அப்போது உனது அரவணைப்பின் கனதி
எனக்கு புரிகிறது...
என்னை சுற்றியுள்ளனவெல்லாம்...
வசீகாரமாய் கிடக்கிறது...
நான் உன்னில் பற்றிக் கிடக்கிறேன்...
அதனால் அழைக்கும் எத்தணிப்பு...
பற்றியிருக்கிறாய் என்பதனை அழுத்திக்கூற...
நான் விழவில்லை என்பதனை தெரிந்துகொள்ள...
தீடீரென எல்லாம் முன்புபோல் மாறுகின்றன...
சந்திரனை வழியில் வைத்து பூட்டிவிட்டான்
அந்தக் கதிரவன்...
ஒளிக்கீற்றுக்களால் கண்கள் ததும்புகின்றன...
நான் அமைதியாக இருகிக்றேன்...
உன்னுடைய அரவணைப்பு என்றும் இருக்கட்டும்!
0 comments:
Post a Comment