மலிவு விற்பனை

இன்று நான் பொழும்பிலுள்ள மலிவு விற்பனை செய்யப்படும் இடமொன்றிற்கு செல்ல கூடியதாக இருந்தது. போகும் போது நானும் எனக்கு என்ன வகையான பொருட்களை வாங்கிக்கொள்ள வேண்டும் என்கின்ற அவசரத்தில் பல பொருட்களை மனத்துள் கற்பனை செய்து கொண்டு புறப்பட்டேன். அது எனக்கு முற்றிலும் புதியதொரு இடம் என்பதனால் எனது கற்பனைகள் ஆசைகள் எல்லாம் எல்லை தாண்டிச் சென்றிருக்கும் என்று நான் எண்ணவில்லை. அதற்கு எனக்கு மனம் இடம் தந்திருக்கவுமில்லை. காரணம் நான் போகின்ற போக்கில் மனம் போகாமல், மனம் போன போக்கில் நான் போவதாக கூட இருக்கலாம் என்று நீங்கள் கற்பனை செய்து கொள்ளலாம். ஆனாலும், சிலவேளை நாங்கள் இருவரும் போகின்ற போக்கிற்கு அப்பால் உலகம் சென்று கொண்டிருப்பதனை நாம் காலம் கடந்துதான் படிப்பினை பெறவேண்டியிருக்கின்றது என்பதனை நினைக்கையில் வாழ்வில் சற்று வெறுப்பும் ஏற்பட்டுவிடுகின்றது. உலகத்தின் ஒவ்வொரு நொடிகளையும் நாம் சரியாக, அச்சொட்டாக முன்னறிந்துகொள்ள அல்லது ஊகித்துச் செயற்பட முடிந்தால் எமக்கு இந்த பாழாய்ப் போன வாழ்வில் எந்தவொரு துயரத்திற்கும் இடமிருக்காதுதானே!

நானும் விற்பனை நடக்கும் இடத்தினை நெருங்கிவிட்டேன். மன்னிக்கவும் மலிவு விற்பனை என்று கூற மறந்துவிட்டது. வீதியோரங்களில் வாகனங்கள் சாரை சாரையாக அடுக்கப்பட்டு நிறுத்தப்பட்டிருந்தது. மனிதனின் இயங்குதலுக்கு ஊதியைக் கொண்டு விதிகள் செய்யவேண்டிய தலை எழுத்தில் அங்கும் இங்குமாக பல பாதுகாப்பு உத்தியோகத்தர்கள். மக்களைப் பாதுகாப்பது இருக்கட்டும்....ஆனால் அவர்களுக்கு தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வழி தெரிந்திருக்கின்றது. அதனால்தான் வார்த்தைகளைவிட அவர்கள் தமது ஊதிகளுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இக்காலத்தில் எவரிடம்தான் பேசி தப்பிக்க முடிகின்றது. வீணான சண்டைகளும் சச்சரவுகளும்தானே வாய்ப் பேச்சுக்களினால் அள்ளிக் கட்டிக்கொள்கின்றோம். இதற்கு காரணம் நாம் மற்றயவர்களை தாழ்வாக கருதிக் கொள்வதுதான். 
தற்போது எனக்கு கதே என்கின்ற தத்துவ பேராசிரியரின் கூற்றொன்று நினைவுக்கு வருகின்றது:

'ஒரு மனிதன் புரிந்து கொள்ளாத போதும், பொறாமைப்படும் போதும் மற்றயவரை முட்டாளாக கருதிவிடுகின்றான்'.

எத்தனை அர்த்தமுடைய கூற்று. சிந்தித்து முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.


நானும் என்ன விதிவிலக்கா என்ன? என்னையும் ஒரு பாதுகாப்பு உத்தியோத்தர் வழிப்படுத்தி என்னுடைய வாகனத்தினையும் பத்தோடு பதினொன்றாக அடுக்கி விட்டார். தற்போது நான் மலிவுவிற்பனை நடக்கின்ற இடத்தின் நுளைவாயிலை அண்மித்த போது எனக்குள் ஏதோ ஒன்று நிறுத்திக் கொண்டது. ஏன்மனம் அங்கொன்று இங்கொன்றாக ஆண்கள் இருக்குமிடம் தேடி அலைந்தது. ஆனால் அது மிகவம் சிரமமான காரியம் என்பது அப்போது எனது முடிவாக இருந்தது. உங்களுக்கு விளங்கியிருக்கும். இன்று ஆண்களில் எவருக்குத்தான் பெண்களை முகாமைப்படுத்தும் முதுகெலும்பு இருக்கின்றது. விரும்பியோ விரும்பாமலோ பெண்களின் அடிமைகளாகத்தான் இவர்கள் கிடக்கின்றனர். பலத்த சன நெரிசல்களுக்கும் வேகின்ற வெப்பத்திற்குமுள்ளால் நான் உள்ளே நுளைந்தேன். மலிவு விற்பனை பெண்கள் பட்டாளத்தினால் முறியடிக்கப்பட்டிருந்தது. ஆண்கள் பகுதிக்கு செல்வதென்றாலும் பெண்களின் அனுமதி அவசியம் என்கின்ற நிலமையில் விலைவாசி மிகவும் மலிவாக இருந்தது. இப்படியொரு நிலமை இருக்கும் என்று என்னால் ஊகிக்க முடிந்திருந்தால் நானும் என் மனைவியுடன் சென்றிருக்கலாம். ஆனால் அப்போதும் அது மிகவும் மலிவாக இருந்திருக்கும்.
இதன்போது இன்று பெண்களின் தலமைத்துவம் எவ்வளவு ஒங்கியிருக்கின்றுது, நிகழ்கின்ற நிலநடுக்கம், சுணாமி என்பன எதற்காக என்பதற்கு முழுமையான அர்த்தமும் எனக்குள் பதியப்பட்டுக் கொண்டிருந்தன. என்ன செய்வது வந்துவிட்டோமே என்கின்ற காரணத்தினால் மலிவு விற்பனையில் நானும் பங்கேற்க வேண்டியிருந்தது. அதாவது, நடக்கவிருக்கின்ற நிலநடுக்கததிற்கும், சுணாமிக்கும் எனது ஒப்பமும் இறைவனுக்கு தேவைப்பட்டிருக்கின்றது போல. ஆனாலும் மனம் ஏதோ செய்வதறியது பொருட்களை தேடிக்கொண்டிருந்தன. பல்வேறு திசை திருப்பல்கள்களுக்கும், தவறான வழிகாட்டல்களுக்கும் மத்தியில் பலர் தமக்குரிய பொருட்களை தேடிக்கொண்டிருந்தனர். சிலர் குடும்பம் குடும்பமாய் வந்திருந்தனர், சிலர் அங்கேயே குடித்தனம் நடாத்த வந்திருந்தனர், சிலர் அழைப்பினை ஏற்று வந்திருந்தனர், இன்னும் பலர் என்னைப் போன்று விளம்பரத்துக்காக வந்திருந்தனர். மேலும் பலர் அங்கேயே முழுநாளும் தஞ்சம் புகுந்திருந்தனர் என்பது எனது அவதானிப்பு. 

இத்தனையிலும் மிக...மிக....மிக...மிக முக்கியமான விடயம் யாதெனில் வருகை தந்திருந்தவர்களில் பெரும்பான்மையானோர் எவர்கள் என்றால் 'அழிந்து போகும் அபாயாக்களும் கிழிந்து போன ஹிஜாபுக்களும்தான்' எனக் கூறுவதில் எனக்கு மிக்க ......... இப்படி கூறுகையில் எனக்கொரு கவிதை நினைவுக்கு வருகின்றது:

நாகரீகம்,
மேலேறிக்கொண்டு செல்கிறது
குட்டைப் பாவாடையில்
அவிழ்த்துக் காட்டுவதுதான்
அழகென்றால் - அது
அழிந்து போகட்டும்.

இத்தனைக்கும் மத்தியில் ஒன்று மட்டும் உறுதி. அங்கு எல்லாம் மலிவு விலையில்தான் கிடைத்தன என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது. எனக்கும் எதிர்பாராத பல பொருட்கள் முன்னெப்போதும் இல்லாதவாறு மலிவு விலையில் சாதாரணமாக கிடைத்தன. இறுதியில் எனது கற்பனைகளுக்குள் நான் சேமித்திருந்த பொருட்களை அங்கு காண முடியாததனால் ஏமாற்றத்துடன் திரும்பவேண்டியிருந்தது.


உனக்கு சக்தியிருக்கின்றது
சகோதரியே!
உலகத்தை சஞ்சரியாதே...
அது மிகவும் கொடூரமானது,
அதன் கால் நகங்கள் விசமம் நிறைந்தன,
அழுக்கும் அனர்த்தமும் நிறைந்தது.


உனக்கென்று கனவுகள் இருக்கின்றன,
தூய்மையுடனும்
நம்பிக்கையுடனும் செல்,
அவைகள் உன்னை துண்டந்துண்டமாக
உருப்பெருக்கும்.


உன்னிடம் இருக்கின்றது சக்தி,
மிகவும் விசித்திரம் பல வாய்ந்தது,
பாதைகளை பரவசமாக்கு,
உனக்கு அற்புதங்கள் மீது நம்பிக்கையில்லையா?


எதிரியின் வார்த்தைகளுக்கு செவி கொடுக்காதே,
நீ மிகவும் அழகானவள்,
மிகவும் அழகான ஒருத்தி,
அதனால் மிகவும் தூய்மையானவள்,
அதனால் நீ அழகானவள்.

0 comments:

Post a Comment