இதயம் திறந்து உரையாடு

நாம் மற்றவர்களுக்கு கொடுக்கின்றவைகளும் அவர்களிடமிருந்து பெறுகின்றவைகளும் தாட்சண்யம் உடையதாகவும் இரக்கமுடையதாகவும் அமையப் பெற வேண்டும் என்பது எனக்குள் இருக்கின்ற நம்பிக்கை. இந்த நம்பிக்கையினால் நான் என்னுடைய வாழ்வில் பல தடவைகள் எனது சிந்தனைகளை சிதறவிட்டிருக்கின்றேன். எமக்குள் பொதிந்து கிடக்கின்ற தாட்சண்யமான இயல்பினை எம்மிடமிருந்து அறுத்துவிடுகின்றவைகள்தான் என்ன? எம்மை ஒரு வன்முறை மனிதனாக கடடவிழ்த்துவிடுகின்ற விடயங்கள்தன் என்ன? மாறாக, சில மனிதர்களை அவர்களுடைய இக்கட்டான சூம்நிலைகளிலும் தாட்சண்யமான இயல்பிலிருந்தும் மாறாமல் காக்கின்ற நிலமைகள்தான் என்ன? இத்தகைய சிந்தனைகள் எனக்குள் சுடர்விடத் துவங்கியது இன்று நேற்றல்ல. எனது சிறுபராயத்திலிருந்தே இப்படித்தான் நிகழ்கின்றன.

பள்ளிக்கூடத்தில் எனது சகபாடிகள் சிலவேளைகளில் என்னை கேலி புரிகின்ற போது, ஆசிரியர் என்னை எப்போதாவது நடாத்துகின்ற விதம் என்பன இன்னும் என் மனங்களை ஊடறுத்த வண்ணம்தான் இருக்கின்றன. இதனை நான் அவதானிக்கின்ற போது எனக்குள் எழுகின்ற முடிவு யாதென்றால், தாட்சண்யத்தில் எமது இதயத்தினை தங்கியிருக்க செய்கின்ற இயல்பினை தக்கவைத்துக் கொள்வது என்பதுதான். இதனைத்தான் தாட்சண்யம் நிறைந்த தொடர்பாடல் எனக் குறிப்பிடலாம். இதனைத்தான் மாகாத்மா காந்தியும் குறித்துக் கூறினார். அதாவது எமக்குள் எழுகின்ற வன்முறைக் கிளர்சியினை தூக்கியெறிந்துவிட்டு, இயல்பாக எமக்குள் புதைந்து கிடக்கின்ற தாட்சண்யத்தினையே இப்பதம் விபரிக்கின்றது. ஏம்மையறியாமலேயே அல்லது நாம் உரையாடுகின்ற வேளை, எமக்கு வன்முறையினை கையாளவேண்டும் என்கின்ற எந்தவொரு முன்னாயத்தமும் இல்லாமலேயே நாம் உபயோகிக்கின்ற சொற்கள் மற்றவர்களையோ அல்லது எம்மையோ புண்படுத்திவிடுகின்றன அல்லது வெறுப்படையச் செய்துவிடுகின்றன.

இத்தாட்சண்யம் நிறைந்த தொடர்பாடல் எமது மொழி வண்மையினை அதிகரிக்கச் செய்வதுடன், தொடர்பாடல் திறனையும் எமக்கு ஊட்டிவிடுகின்றன எனலாம். அதாவது, சுருங்கக் கூறினால் எம்மை மனிதனாக தொடர்ந்தும் நிலைக்கச் செய்வது இந்த தொடர்பாடல்தான். பெரிதாக இதனால் வேறுபடாக எதுவும் கூறப்படவில்லை. இவை சாதாரணமான விடயங்கள்தான். ஆனால் நாம் மறந்துவிடுகின்றமையினால் மீண்டும் கூறப்படுன்றது அவ்வளவுதான். எங்களை நாங்களே சுயபரிசோதனை நடாத்திக் கொள்வது, எமக்கிடையில் மனிதத் தன்மையுடன் எவ்வாறு உறவுகளை வளர்த்துக் கொள்வது, இவ்வாறு எமக்கிடையில் புரிந்துணர்வுடன் எப்படி வாழ்க்கையினை வாழக் கற்றுக் கொள்வது என்பனவற்றினைத்தான் இங்கு கூறப்படுகின்றன.

இந்த தொடர்பாடல் வழிகாட்டல் யாதெனில் அல்லது அதன் அத்திவாரம் யாதெனில், எமது கருத்துக்களை நாம் எவ்வாறு தெரிவிக்கினறோம் அத்துடன் மற்றவர்களின் கருத்துக்களை எவ்வாறு செவியேற்கின்றோம் என்பதுதான். சாதாரணமாக நாம் பேசுவது போன்றல்லாது, தன்னியல்பான பதிலளிப்பு செயற்பாடுகளுடன் அல்லது இங்கு எமது வார்த்தைகள் எமது கருத்துக்களை ஒட்டியதாக, எமது உணர்வுகளை வெளிப்படுத்துவனவாக, எமது தேவைகளை வெளிப்படுத்துவனவாக இதயத்திலிருந்து வெளிப்படுவனவாக இருக்கும். இங்கு நாம் எமது கருத்துக்களை தெளிவாகவும், கௌரவமாகவும் வெளிப்படுத்துவதுடன் மற்றவர்களுடைய கருத்துக்களுக்கு மதிப்பளிப்பவர்களாகவும், அவர்களுடைய உணர்வுகளை புரிந்து கொள்பவர்களாகவும் நாம் எம்மை தயார்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

இந்நடவடிக்கை எமது வழமையான தீர்மானிக்கும மற்றும் விமர்சிக்கும்; இயல்பினால் எழும் சுயநல மனப்பாங்கை, பின்வாங்குகின்ற குணாதிசயத்தினை, தாக்குதல் செய்யும் பழக்கத்தினையும் விட்டும் எம்மை தூரப்படுத்தி எமது உறவுகளையும், குணநலன்களையும் புதியதொரு வெளிச்சத்திற்கு இட்டுச்செல்ல முயல்கின்றது. இதனால், தடை, சுயநலம் மற்றும் வன்முறை என்ப தூர வீசப்படுகின்றன. நாம் அவதானித்தவை தொடர்பாக தீர்மானமெடுப்பதனை அல்லது விமர்சிப்பதனை விட்டுவிட்டு தெளிவாக்கிக்கொள்ள முயற்சிக்கின்ற வேளை எம்மால் தாட்சண்யத்தின் ஆழத்தினை வெகுவாக புரிந்துகொள்ள இயலும். இதற்காக எம்மில் நாம் ஆழமான செவியேற்றல் - நாம் தொடர்பாகவும் மற்றவர்கள் தொடர்பாகவும், மதிப்பு, கவனிப்பு தன்னிலை உணர்தல், ஒருவருக்கொருவர் தமது ஆசைகளை பகிர்ந்து கொள்ளுதல் எனும் ஆளுமைகளை வலுப்படுத்திக் கொள்ளல் அவசியம்.

இதனை நாம் சற்று உச்சமாக சென்று சிந்தித்தால், எமது எதிர்பார்ப்புக்களை நோக்கி நாம் எங்கெல்லாம் நகருகின்றோமோ அங்கெல்லாம் எம்முடைய மனத்தினை தொடர்ந்தும் தயார் நிலையில் வைத்திருக்கின்ற முயற்சியென்றும் இதனைக் குறிப்பிட முடியும். இது மிகவும் ஆழமான ஒரு விடயம்.

என்னிடம் ஒரு சம்பவம் இருக்கின்றது. 'எனது நண்பன் ஒருவன் மோட்டர் சைக்கிளில் செல்வதற்காக தலைக்கவசம் வேண்டும், இருக்கிறதா என்று என்னிடம் கேட்டான். அப்போது நான், தலைக்கவசம் தலையிருப்பவர்களுக்குத்தானே தேவை, உனக்கு எதற்கு என்றுதான் என்னிடமிருந்து பதில் சென்றது.'

இவாவாறாக பல்வேறு சம்பவங்கள் எம்மத்தியில் இவ்வாறுதான எதேச்சையாக நிகழ்ந்துவிடுகின்றன. காலம் கடந்த ஞானம் பெறுவதனை விட கொரூரமானதுதான் காலம் கடந்து வருந்துவது என்பது. இத்தகைய வருத்தம் நமக்கா மட்டுமல்ல மற்றவர்களுக்காகவும் சில வேளை நிகழும். இதனை அனுபவிப்பதென்பது மிக மிக கொரூரமானது. இதற்கெல்லாம் காரணம் எதுவென நாம் நோக்கினால் அவை இறுதியில் நாம் மற்றவர்களைப் பற்றி, அவர்களுடைய தேவைகளையும் உணர்வுகளையும் பற்றி அதிக கரிசனை காட்டுவதில்லை என்பதுதான் மிக பிரதான ஒன்றாக இருக்கும். இத்தகைய ஒரு நிகழ்வினால் நானும் தற்போது பாதிக்கப்பட்டுள்ளேன் என்பதனால் இவற்றையெல்லாம் இங்கு பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கின்றது.

இவை போன்ற நிகழ்வுகளினால் எனக்குள் புலப்படுகின்ற வாசிப்பு யாதெனில், எமது கலாச்சாரமும் எம்முடைய அடித்தளங்களும் எமது தேவைகளைவிட உணர்வுகளைவிட மிகவும் பலயீனமாகத்தான் காணப்படுகின்றன. இத்தகைய தாட்சண்யமான தெடர்புகள் வாயிலாகத்தான் நாம் எமது மனத்தினை செம்மைப்படுத்திக் கொள்ள முடியும். அத்தகைய மனம்தான் எனது தேடல்களுக்கு உள்ளார்ந்த அர்த்தத்தினை வெளிப்படுத்தவல்லது. எனது வாழ்வில் நான் வேண்டுவது தாட்சண்யம். அது எனக்கும் உனக்கும் இடையில் இதயத்திலிருந்து இதயத்திற்கு பீறிட்டுத் தாவ வேண்டும்.





என்னிலிருந்து நீ எடுத்துக் கொண்டவைகளை விட
நான் அதிகமாக தருவதற்கு நினைக்கவில்லை.
நான் அனுபவிக்கின்ற இன்பங்களை
நீ புரிந்துகொள்கின்ற போது
நான் உனக்கு தருகின்றேன்.


உன்னை நான் கடனாளியாக்க கருதி,
உனக்குத் தெரியும் - எனது
கொடுக்கல் வாங்கல்கள் இன்னும் முடியவில்லை என்று.
காரணம், நான் -  உனக்காக 
அன்புடன் வாழவேண்டும்.

அருளுடன் பெற்றுக்கொள்வதுதான்
மிகச் சிறந்த கொடுப்பனவாக இருக்கலாம்.
இவையிரண்டையும் பிரித்துக் காட்ட என்னால் முடியாது.

என்னிடம் நீ தருகின்ற போது
நான் அதற்காக எனது ஒப்புதலை அளித்தேன்.
நீ என்னிடமிருந்து எடுத்துக்கொண்ட வேளை,
அவ்வாறுதான் நானும் உனக்கு தருவதாக உணர்ந்தேன்.

0 comments:

Post a Comment