நட்பு///!!!^^^???...


எனக்கு நட்பில் இருக்கின்ற நம்பிக்கை ஒரு போதும் நண்பர்கள் என்று கூறுபவர்களிடத்தில் இருப்பது கிடையாது. அவ்வாறு விபரிப்பவர்கள் கூட அதனை என்னிடத்தில் மெய்ப்படுத்தியதும் கிடையாது. வழமைபோன்று தற்போது கூட நண்பர்கள் என்று கூறி சிலர் என்னைக் கீறி விட்டு வெளிச் சென்றிருக்கின்றன. அவற்றில் ஒன்று இன்று வரை ஊகமாயிருந்து இன்றோடு ஊர்ஜிதமாயிருக்கின்றது. இதற்கு காரணம் நட்பின் உண்மை வடிவத்தினை நான் அறிந்திருப்பதாக கூட இருக்கலாம். சிலருக்கு பிறந்தோம் என்பதனை விட இறந்தோம் என்பதில் அதிக அக்கரை இயல்பாய் வந்து விடுகின்றது. இன்னும் சிலருக்கு இறந்தோம் என்பதனை விட ஏன் பிறந்தோம் என்பதில் கூடுதல் அக்கரை தோற்றம் பெற்று விடுகின்றது. இங்கு ஒன்று ஆரம்பத்தில் ஏற்படும் புரிதல். மற்றொன்று, இறுதியில் ஏற்படுகின்றது. நட்பிலும் இப்படித்தான் பிறப்பும் இறப்பும் உண்டு....எனக்குத் தெரியாது. இவர்கள்தான் அதனை மெய்ப்பிக்கின்றார்களே! தகுதியற்றவர்கள் பந்திகளை வாசிக்க வேண்டாம்.

'நண்பர் யார்? இரு உடல்களுக்குள் குடித்தனம் கொண்ட ஒரே பிராணம்' - அரிஸ்டோட்டல்

நட்பு என்றால் என்ன? உறவு என்பதன் மெய் அர்த்தம்தான் என்ன?  நாம் இந்த வினாவினைத்தான் நாளாந்தம் கேட்டுக் கொண்டிருக்கிறோமே தவிர, அதற்கான திருப்தியான விடையினை ஒருபோதும் கொண்டு வந்தது கிடையாது. இதற்கும் காரணம் இருக்கின்றது. உறவு என்பது வார்த்தைகளிலோ அல்லது வர்ணனைகளிலோ உள்ளடக்கிட முடியாத உணர்வுகளின் கலவை. அது ஒரு அழகான படிவம் எனலாம். உறவானது மிகவும் தாங்கொணா துயரங்களையம் தன்னகத்தே கொண்டிருப்பதனால் அதனை விபரிப்பது என்பது மிகவும் கடினமானது.



இருப்பினும், நட்பு துன்பத்தின் போதும் இன்பத்தின் போதும் நிபந்தனை ஏதுமற்று சிலாகிக்கின்ற ஒன்றாக கருதப்படலாம். ஒரு தனித்தன்மையான கவர்ச்சியுணர்வு, விசுவாசம், நேசம், மரியாதை, நம்பிக்கை, மகிழ்ச்சியின் சிகரம் முதலியனவெல்லாம் நட்பிற்கு அர்த்தமாக கூறப்படுகின்றது. இதேபோன்று, ஆசை, இருவருமொத்த மரியாதை அத்தோடு இருவருக்குமிடையில் கெட்டியான நெருக்கம் என்பனவெல்லாம் நண்பர்கள் தமக்குள் பகிர்ந்து கொள்கின்ற விடயங்களாகின்றன. இவையெல்லாம் நட்பின் பொதுவான விடயங்கள். உண்மையான நட்பினை ஒருவர் அனுபவிக்க வேண்டுமாக இருந்தால் அவர் கட்டாயம் உண்மையான நண்பர்களை வைத்திருக்க வேண்டும். அப்போது அவர்கள்தான் பொக்கிசமாகவும் இருப்பார்கள்.

என்றாலும், நாம் நட்பின் அர்த்தத்தினை கண்டுகொள்ள இவ்வளவு வார்த்தைகளை வாரி இறைப்பதற்கு தேவை கிடையாது.

"நட்பு என்பது ஒருவருடன் பத்திரமாக வைத்திருக்கும் வெளிப்படுத்த முடியாத உணர்வுகளின் சௌகரிகம் என்பதுடன் அதனை வார்த்தையாலோ அல்லது எண்ணங்களினாலோ மதிப்பிடமுடியாது" என ஜார்ச் ஈலியட் குறிப்பிடுகின்றார்.

நட்பு என்பது உணர்வுகளின் மெய்யான இருப்பிடம். அதனை நீங்கள் உங்களுடைய நண்பர்களின் முன்னால் வெளிப்படுத்தும் போது வார்த்தைகளாலோ அல்லது எண்ணங்களினாலோ அளவிட்டுவிடக் கூடாது. இது எப்போது என்றால், யாராவது உங்களைப்பற்றி உங்களைவிட அதிகமாக தெரிந்து வைத்திருப்பாராக இருந்தால் நீங்கள் அதிகமாக உணர்ச்சிவசப்படுகின்போது உங்களுடன் அவர்கறளின் பிரசன்னத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இரவு முழுக்க நீங்கள் நித்திரையுடன் போராடியிருந்தாலும், காலை எழுந்ததும் அந்த பொழுது உங்களுக்கு மிகவும் புரிதல்கள் நிறைந்ததாக அமையும். சந்தோசங்களை பகிர்ந்து கொள்வதிலும், இருவரும் ஒன்றாக இருந்து அளவளாவுவதிலும் பார்க்க நட்பு என்பது மிகவும் அப்பாற்பட்டது. அது யாராகிலும் உன்னை வந்து, உனது வாழ்க்ககையின் சிரத்தையான நிலையில் இருந்து மீட்டெடுக்கும் போது ஆரம்பிக்கின்றது. நட்பு என்பது நிலையானது.

இருதயத்தில் இருந்து எழும் மெய்யான அன்பளிப்புகள்தான் நட்பின் அடையாளமாகும். நட்பினால் எழும் பிணைப்பானது காலத்தினால் தீர்மானிக்கப்படுகின்றது. எப்படி இருவருக்கிடையில் நம்பிக்கை வளருகின்றதோ அதே அளவு நெருக்கமும் அதிகரிக்கின்றது.

ஆனாலும், வேறுபட்ட மனிதர்கள் வேறுபட்ட நிலைகளில் நட்பு என்பதனை நோக்குகின்றனர். சிலருக்கு அது அவனோஃஅவளோ உன்னை வெறுத்திட முடியாது என்கின்ற நம்பிக்கை. இன்னும் சிலருக்கு, அது நிபந்தனை ஏதுமின்றிய நேசம்ஃகாதல். இன்னும் சிலர் அங்கு இருக்கின்றார்கள். அவர்கள் நட்பு என்பதனை தோழமையாக உணருகின்றார்கள். அவரவர் எத்தகைய அனுபவத்தினை கொண்டிருக்கின்றார்களோ அந்தளவில் அவர்களுடைய நட்பிற்கான வியாக்கியானமும் அமைந்துவிடுகின்றது. நட்பு என்பதன் நோக்கமும், அதன் அர்த்தமும் எமது வாழ்வின் நிலமைகளில் ஏற்படும் கஷ்டங்களில் சிறிதளவையேனும் எமது நண்பர்களுக்கும் அளிப்பதாகும். ஆனால் அது அவர்களை வருத்துவதற்காக இருக்க கூடாது. உரோம மெய்யியலாளர் சிசரோ "நட்பு என்பது அதன் எதிரிடைகளான துயரங்களையும், உளைச்சல்களையும் பகிர்ந்து கொண்டு தம்மை மிருதுவாக்கி கொள்வதன் வாயிலாக புத்தெழில் பெறுகின்றது" எனக் கூறுகின்றார்.

என்னைப் பொறுத்தவரை, இது ஒரு இயல்பான உறவு நிலை, எமது ஞாபக நிலைகளைக் கடந்த காலத்தில் அது ஆரம்பித்திருக்க வேண்டும். நட்பினைப் பற்றி பல்வேறு கட்டுக் கதைகளும், சமயம் சார்ந்த வரலாறுகளும் உலகத்தில் நிறையவே உள்ளன. எவர் நம்பிக்கையுள்ள நண்பர்களை பெற்றுக் கொள்கின்றாரோ அவர் மதிப்பிட இயலா கருவூலமொன்றை பெற்றுக் கொண்டதாக அவைகள் கூறுகின்றன.

உளவியல் ரீதியாக நோக்குவோமானால், நட்பு என்பது இருவருக்கிடையில் காணப்படும் காலத்தினால் கட்டுண்ட உறவு நிலை எனப்படுகின்றது. சிறு குழந்தைகள் இரண்டு நட்பு கொண்டாடுவதனைப் போன்று, அவர்கள் தமது நடவடிக்கைகளுக்கு ஏற்ப தமது வரம்பெல்லைகளையும் அமைத்துக் கொள்கின்றார்கள். அவர்கள் உறவுகள் தேவை என்றிருந்த போது எவ்வாறு எல்லைகளை வகுக்க கற்றுக் கொண்டார்களோ அதே போன்று இவை அவர்கள் வாழ்வில் மிகவும் ஆரோக்கியமான நண்பர்களாக செயல்படுவதாக காட்ட உதவும். இவை அவர்களுடைய உணர்வுகளை விருத்தியடையச் செய்ய வாய்ப்பாக அமையும். எவ்வாறாயினும், ஒருவருடன் கலந்துள்ள எவ்வித உறவும் இயல்பான ஊக்கத்தினையும், விருத்தியினையும் தருவதாக அமைதல் வேண்டும். ஏனையவர்களிடம் இருந்து எத்தகைய உதவிகளும் இன்றி ஒருவர் மட்டும் எல்லா முயற்சிகளையும் செய்து தாக்குப் பிடிப்பாராக இருந்தால் நட்பு என்பது வாழாது.

நட்பானது குழந்தை ஒன்று சமூகமயப்படுகையில் ஆரம்பிக்கின்றது என்றிருப்பினும், அவன்/அவள் சரி எது? பிழை எது? என்று பிரித்தறியும் நிலை அடையும் வரையிலும் கவனமாக நடப்பது அவசியம். பிழையான நட்பும், சமூகமயப்படுதலில் இருக்கின்ற குறை நிலையும் பல்வேறு உளவியல் காரணிகளுக்கும், கோளறுகளுக்கும் வழியேற்படுத்திவிடுகின்றன. இறுதியாக அவை தவறான சமூக நெகிழ்ச்சிப்படுத்தலுக்கு இட்டுவிடும். ஒரு குழந்தையின் ஆளுமை விருத்திக்கு தகுந்த நட்பு இன்றிமையாதது. உடன்பாடானதும், எதிர்மறையானதுமான இருவகை அனுபவங்களும் தனிநபரொருவருடைய ஆளுமையினை தூய்மையாக்குகின்றன. இதனால், நீ நட்பு ஒன்றினை தேர்வு செய்யும் போது அது உனது உளவியல் நிலைக்கும், உணர்வு நிலைக்கும் ஒத்திசைவதாக இருக்க வேண்டும் என்பது அடிப்படையாகும்.

நட்பு என்பதற்கு அர்த்தம் காண்பது மிகவும் சிரத்தையான விடயம். அது என்றும் பற்றியெரிகின்ற ஒரு வினா. இருப்பினும், நாம் எமது நண்பர்கள் என்று கூறிக் கொள்பவர்களை சந்திக்கின்ற போது தானாகவே அதற்கான விடையினை மிகவும் தெளிவாக புரிய முடியும். நட்பு என்பதன் பொருள் எமது இருதயத்துள் படிந்து கிடக்கின்றன. ஏனெனில் நட்பு என்பது உணர்வுகளால் மட்டும் இயலக்கூடியது, விபரிக்க முடியாதது. எது மிகவும் அழகானதோ, அவசியமானதோ அது புலக்கண்களுக்கு அகப்படாது. ஆனால் அவை அகத்தினால் உணரப்படும்.

நட்பினை புரிந்துகொள்ள வேண்டுமா? வாருங்கள், இந்த உலகத்தை உங்களது அகத்தினால் காணுங்கள்.

நட்பினை புரிந்து கொள்வதனை விட 
வேறு அருள் கிடையாது.
எவர் தொல்லைப்பட்டு கிடக்கிறாரோ...
எவரில் நாம் தாங்கிக் கிடக்கிறோமோ...

நண்பன்- என்னை நன்றான் அறிந்தவன்.
நன்றாய் உணர்ந்தவன்.
ஆசுவாசமான நாள் அது.
அவன் - கண்டிப்பதில் மிருதுவானவன்.
அனால் அரவணைப்பு பலமாயிருக்கும்.

நட்பினைத் தவிர வேறு அருள் இருக்க முடியாது...
எங்கு அக்கரை இருக்கிறதோ,
எவர் எம்மை நேசிக்கின்றாரோ!
ஒவ்வொரு நாளும்,
ஒவ்வொரு இரவும்,
ஒவ்வொரு வணக்கத்திலும்...
இருக்குமா?

உனது தொலைந்து போன நட்பிற்கு நன்றி.

1 comments:

fathima rushdha said...

Good writing...something cretive....SURPRIZE...
AWAIT....
BUT EGo and the pride is the poison to the pure friendship

Post a Comment