றெஜினி, குமாரி மற்றும் நான்

27 December 2015

றுகுணு குமாரி அழகானவள், அறிவுள்ளவள். றெஜினியோ அழகானவள், ஆனால் புத்திசாலி.

குமாரிக்கு தான் விரும்புபவனை மணந்து கொள்ள வேண்டும் என ஆசை. இதனால் அவள் அறிவாளி. இருப்பினும் றெஜினி தன்னை விரும்புபவனை மணக்கவேண்டுமென நாட்டங்கொண்டவள். றெஜினியிடம் இருக்கும் வேகமும் விவேகமும் குமாரியிடம் இல்லை. குமாரியிடம் சாந்தம் இருக்கிறது, அவள் நேரத்திற்கு எதையும் நிறைவேற்றி முடித்ததாய் நான் கேள்விப்பட்டதே கிடையாது.

இருவரும் அழகானவர்கள் என்பதனால் அவர்களை என்னால் அவ்வளவு இலகுவில் விட்டுவிட முடியவில்லை. கருமம் நேரத்திற்கு நன்றாய் அமையவேண்டுமெனில் றெஜினியை அழைத்துக்கொண்டு செல்வதைத் தவிர வேறு தெரிவு கிடையாது. இது தெரிந்து குமாரி கோபித்துக்கொள்வாளா என்பது பொருட்டல்ல. அவள்தான் சாந்தமானவளாயிற்றே. றெஜினியுடன் சென்றுவந்த மாத்திரத்தில் குமாரியிடம் இதனை விளக்கி கூறினால் அவளும் என்னை அனைத்துக் கொள்வாள் என்ற நம்பிக்கை இருக்கிருக்கின்றது. திரும்பி வரும்போது வேண்டுமெனில் குமாரியை அழைத்துக் கொண்டு வர என்னால் முடியும்.

நான் அழகானவன் என்பதனால் இருவருக்கும் என்மீது அலாதிப்பிரியம் உண்டு. இருவரும் இருவேறுவகை அனுபவங்களை எனக்கு தருவார்கள். tongue emoticon


‪#‎றஜரட்டறெஜினி‬#றுகுணுகுமாரி# டிறவலிங்க் டூ மாத்தற*

0 comments:

Post a Comment