எல்லோரும் ஒரு வகையில் ஒற்றுமையானவர்கள்தான்


நேற்று மாலை எனது நன்பி ஒருவருடன் நீண்ட நாட்களுக்கு பின்பு கையடக்க தொலைபேசியில் பேசுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. அதன் போது அவள் நான் இந்த மூஞ்சிப்புத்தகத்தில் கிறுக்குகின்றவைகளை வாசிப்பதாக கூறிவிட்டு என்னை ஒரு பின் நவீனத்துவத்திற்குள் சிதறிப்போய்க் கிடக்கின்ற தூசியாக நினைவூட்டிவிட்டு நான் அவ்வப்போது கிறுக்குகின்றவைகள் ஏதோ ஒரு பாதிப்பினை வெளிக்காட்டுவதாகவும்இ ஆனால் எதையும் மட்டிட்டு கூற முடியாதுள்ளதாகவும் கூறினாள். நியாயம்தான் சாதாரணமாக எவருடைய வரையறைகளுக்குள்ளும் கட்டுண்டு கிடக்காமல் சுயசிந்தனையில் கிறுக்குகின்றவைகள்தான் இவைகள். இதனைச் சிலர் ......இல்லை பலர் தான்தோன்றித்தனம் என்றும் கூறுவர். மன்னிக்க வேண்டும். நன்றாக சிந்தித்து பார்த்தால் சிலர் என்றாலும்......பலர் என்றாலும் இரண்டும் குறைப்பதந்தான். வரையறைகளுக்குள்ளும் மட்டுப்பாடுகளுக்குள்ளும் சிக்கித்தவிக்கும் போதுதான் நாம் எம்மை மட்டும் குறுக்கி அணுகுகின்றோம். இங்கு யாவருக்கும் இருக்கின்ற நன்மை தீமைகள் ஒன்றுதான் என்றால் பொதுவாகத்தானே தென்படும்.




இதற்கிடையில்தான் நான் நேற்று எனக்கு இருக்கின்ற வியாதியினை தீர்த்துக்கொள்ள புத்த கடைக்குச் சென்றேன். அங்கு ஒரு வழமையிருக்கின்றது........கடைக்கு வருபவர்கள் எல்லோரும் செருப்பை உள்ளே போக முன்பு வெளியில் களற்றி வைத்துவிட்டு போக வேண்டும். வேறு ஏதெனும் பொருட்கள் கொண்டு சென்றாலும் அவைகளை வைப்பதற்கு அங்கு வேறாக ஒரு மேசை தயாராக இருக்கிறது. ஆனால் எனக்கு இதுவரை அது ஏன் என்று தெரியவில்லை. சிலவேளை உள்ளே புகின்ற நாம் செருப்பை விடக் கேவலமானவராக இருக்கலாம் அல்லது கடை உரிமையாளர்கள் எமது செருப்புக்களை எம்மை விட மதிப்பதாகவும் இருக்கலாம். ஏனென்று எம் எல்லொருக்கும் தெரியம். அப்போது நான் எனது செருப்பினை மிகவம் மரியாதையுடன் கழற்றிக்கொண்டிருந்தேன்....அப்போது அங்கு வந்த ஒருவர் அதனை உறுதிப்படுத்தினார். அவர் செருப்பினை கழற்றி வைத்துவிட்டு அதன் மீது தனது கையிலிருந்த பையினை வைக்க முயன்றார். அப்போது இதனை கண்காணித்துக் கொண்டிருந்த புத்தகடையில் வேலை செய்கின்ற ஒருவர் 'அதனை மேசையில் வையுங்கள்' என்று கூறினார். அப்போது அந்த மனிதர்.. 'இல்லைஇ இதனை இங்கு வைத்தால் செருப்பு பாதுகாப்பாக இருக்குமே' என்று நினைத்தேன் என்று பதிலளித்தார். அப்போது சற்று உள்ளாலே சிரித்துக்கொண்டு பையை சற்று கடைக்கண்ணால் நோட்டமிட்டேன். அது வேறு ஒன்றுமில்லை......இ பையிலிருந்தவை இரவுச் சமையலுக்காக வாங்கிய காய்கறிகள்தான். இப்போது விளங்குகிறதா யாருக்கு எது முக்கியம் என்று. ஓவ்வொருவருடைய பர்வையும் அவர்களுடைய சிநத்தனைகளும் எப்படி வேறுபட்டாலும் எல்லோரும் ஒரு வகையில் ஒற்றுமையானவர்கள்தான். அது எப்படி? நான் ஏற்கனவே இங்கு கூறிவிட்டேன். நீங்கள் வாசித்து பாருங்கள்.அல்லது ஓவியத்தையாவது பாருங்கள்.............................................

0 comments:

Post a Comment